சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி, ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா ஆனது: ரகசியமாக வந்தது-சென்றது – பின்னணி என்ன?!
முன்பு பிஷப்பிடம் வேலை பார்த்து புகார் கூறியது, இப்பொழுது, குருவீடம் சிஷையாக இருந்து புகார் கூறியது: இன்றைய நிலையிலும் வெளிநாட்டு காரன், வெள்ளக் காரன் சொன்னதான் ஒப்புக் கொள்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், காசுக்காக இந்தியாவிற்கு வந்து வேலை செய்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள் முட்டாள் இந்துக்கள்! சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். நகைகளை விற்கும் வியாபாரியாகவும் இருந்தார். இதற்காகவும் இணைதளம் வைத்திருக்கிறார். “ஆண் மற்றும் பெண் சக்திகளை சமன் படுத்துக! உள்ளிருக்கும் ஆண் கடவுள் மற்றும் பெண் கடவுளர்களை எழுப்புக! சந்திரக் கல் மற்றும் சூரிய கல் வேண்டுமா, வாருங்கள், என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள்!,” என்ற்லாம் விளம்பரம், வீடியோக்கள். சிவசக்தி படத்தை வைத்து, அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை சின்னமாக்கி, வியாபாரத்திற்கு உபயோகப் படுத்திய சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, என்கின்ற நித்திய சுதேவி! “யார் தருவார் இந்த அரியாசனம், நித்திய சுதேவிக்குக் கிடைத்த சிம்மாசனம்!” பாணியில் உட்கார்ந்து, படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் தான், “குருவுக்கு எதிரான குருவும் நான் தான்!,” போன்று செயல்பட்டு புகார் கொடுத்துள்ளார். இங்கு, நித்தியானந்தாவுடன், நேரிடையாக எந்த மோதலும் இல்லை, ஆனால், எதையோ எதிர்பார்த்து வந்து, அது கிடைக்காதலால், ஏமாந்து, அதன் மூலம் உண்டான வெறுப்பில் வீடியோ-புகார் செய்துள்ளார். ஆனால், அது குஜராத் தந்தையின் பூகாரோடு, நேரத்தில் ஒத்துப் போவது கேள்வியை எழுப்புகிறது.
பிஷப் ரால்ப் நபிரேஸ்கிடம் ஏற்பட்ட மோதல்: தானே தெய்வம் போன்று யதேச்சாதிகாரமாக செயல்பட்டு, கூட்டங்களை நடத்தினார். ஏசுயோகா பற்றி புத்தகத்தை வெளியிட்டார்[1]. பிஷப் ரால்ப் நபிரேஸ்கி எல்லா உதவிகளையும் பெற்று, அவரையே குற்றஞ்சாட்டியது வியப்பாக உள்ளது[2], “மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சொல்லிக் கொள்ளாமல் மறந்து விட்டாள்….சமூக வலைதளங்களிலும் எங்களை தடுத்து விட்டாள். …..ஒரு கடவுள் பற்றிய வீடியோக்களை எடுத்து விட்டாள். கிருத்துவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பொழுது, இந்துக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளாள். இதனால், இந்து–கிருத்துவர்களிடம் வெறுப்பு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது..” சாரா தான் எழுதிய புத்தகத்தில், இவரைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, கிண்டலாக எழுதியிருப்பது, இவர்க்கு கோபத்தை மூட்டியுள்ளது. இருப்பினும், கிருத்துவர்களான,இவர்களிடையே, ஏதோ போட்டி, பொறாமை, சிக்கல், தகராறு இருப்பது தெரிகிறது.
சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, உள்கலாச்சார மயமாக்கல் திட்டத்துடன் செயல் படுகிறார்: வாடிகன் கவுன்ஸில்-II கூட்டத்திற்கு பிறகு உள் கலாச்சார மயமாக்கல் மற்றும் மற்ற மதங்களுடன் உரையாடல் என்ற திட்டங்களுடன், கத்தோலிக்க சர்ச் இந்தியாவில் ஆசிரமங்கள் உருவாக்கி, கத்தோலிக்க பாஸ்டர், பிஷப் போன்றவர்கள் இந்து சன்னியாசிகள் போலவே காவி உடை அணிந்து, இந்துமத சின்னங்களைத் தரித்துக் கொண்டு, உலா வந்து, எளிமையான அப்பாவி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதைப் பற்றிய விவரங்கள் சிலர் எடுத்துக்காட்டி வந்தாலும் பரவலாக இப்பிரச்சனை பேசப்படுவது இல்லை. அவர்கள் இந்துக்கள் போலவே இருந்து கொண்டு இந்து கடவுள்களையும் வணங்கிக்கொண்டு வேடதாரிகள், போலி சாமியார்கள். இவர்கள் பலவித குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். செக்ஸ், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் மற்ற உண்மையான இந்து சாமியார்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் ஊடகங்களில், பொதுவாக சாமியார் குற்றத்தில் ஈடுபட்டார், சிறுமிகளை கற்பழித்த பாலியல் குற்றத்தில் மாற்றிக் கொண்டார் என்று தான் வருகினனவே தவிர, அக்குற்றம் சேர்ந்த சாமியார் கிருத்துவர் என்று சொல்வதே இல்லை. இங்கும் இப்பெண், “கிருத்து தான் கடவுள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறாள். பட்டுப் புடவை அணிந்து, நெற்றியில் பெரிதாக குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு, வேடம் போட்டுத் தான் வந்திருக்கிறார்!
சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, பிரான்சிஸ் சேவியர் குளூனி ஒப்பீடு செய்ய முடியுமா?: மந்திர-தந்திர-யந்திர வித்தைகள் கற்றுக் கொண்டு ஏமாற்றலாம் என்று இப்பெண் வந்தாளா, தமிழகத்தை குளூனி தேர்ந்தெடுத்தது போன்று தேர்ந்தெடுத்தாளா என்ற கேள்வி எழுகிறது. நித்தியானந்தா ஆசிரமங்களுக்குச் செல்வது, விவரங்களை சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, முதலியவை செய்திருப்பது, அவரது வீடியோக்களிலிருந்து அறியலாம். திருவனந்தபுரம் “ரகசியப் பணிக்காக” சென்றது அதற்காக இருக்கும். பார்வதி போல, திரிசூலத்துடன் போஸ் கொடுத்து, புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்தியர்களான எமக்கு, ஏதோ புராண படத்தில் நடிப்பது போன்று இத்தகைய முறையில் போஸ் கொடுக்க என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை. பிறகு நான் வாடிகனால் அனுப்பப் பட்ட ஒற்றனா இல்லையா என்று ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இறையியல் ரீதியில், கிருத்துவ பெண்ணாக, பிஷப் ரால்புடன் பிரச்சினை என்றால், அதை அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும், தமிழகத்திற்கு ஏன் கொண்டு வரவேண்டும்? “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற போர்வையில் கிருத்துவர்கள் இத்தகைய வேலைகளை செய்ய உட்புகுவது சாதாரணமான விசயமாக உள்ளது[3]. குளுனிக்கும், இப்பெணுக்கும் செயல்பாட்டில் ஒற்றுமை உள்ளது. இந்துபோல வேடமிட்டு நடந்து கொண்டு, பிறகு இந்து மதம், மடாதிபதி, நம்பிக்கைகளை உள்நோக்கத்துடன் குறைகூறுவது அல்லது தமது ஏசு-மேரி இவர்களை வீட கீழானவர் போன்று விளக்கம் அளிப்பது, முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய ஒப்பீட்டு இறையியல் விளக்கத்தினால் தான், குளூனிக்கும், சில சென்னை இந்துக்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அவர், மெத்தப் படித்தவர் என்பதால், அந்த அளவில் போனது. ஆனால், இப்பிரச்சினை, இவர்களது நிலைக்கு வந்துள்ளாதால், அதுபோன்ற நிலையில் உழல்கிறது.
இந்து மதம் தாக்கப் படுவது கண்டிக்கப் பட வேண்டியுள்ளது: இந்து மதத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பல வெளிநாட்டவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவும் அவர்கள், இந்துக்கள் போலவே நடிப்பது, உடை அணிவது, இந்து மதத்தைப் பற்றிப் பேசுவது, இந்துக்களுடன் நட்பு வைத்திருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்[4]. உண்மையில் அதன் மூலம் அவர்களிடமிருந்து, குறிப்பாக விஷயங்கள் தெரிந்தவர்களிடம் இருந்து நுணுக்கமான தகவல்களை பெற்று, அவற்றை தனது வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்[5]. யோகா, ஆயுர்வேதம் முதலியவை அனைத்துலக ரீதியில் வியாபாரமாக வருவதால் அதற்கு இத்தகைய போலி வேடதாரிகள், இந்துத்துவம் போன்ற கொள்கைகள் உதவியாக இருக்கின்றன[6]. பிரச்சினைகள் வரும்பொழுது, குற்றங்களில் மாட்டிக் கொள்வது, சட்டமீறல்கள் என்று வரும்போது, அவர்கள், இந்துமதம் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். தொடர்ந்து அவ்வாறு இந்துமதம் தாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகளும் துணை போவதை கண்டு கொள்ளலாம். இது இவர்கள் எல்லோருக்குமே மறைமுகமாக உறவுகள் இருப்பது தெரிய வருகிறது. இதனால் தான் இத்தகைய செயல்களை இந்துக்கள் எதிர்க்க வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்களது பிரச்சினைகள், குற்றங்கள் முதலியவற்றை தமதாகக் கொண்டு செயல்படாமல், இந்துமதம் தான் காரணம் என்று பொய்சொல்வது, பிரசாரம் செய்வது, கண்டிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
30-11-2019
[1] https://jesusyoga.files.wordpress.com/2013/07/christ-consciousness.pdf
[2] And then after almost 3 years she just left. Secretly….. with lies, hiding……No word of explanation. After everybody gave everything to her and provided all she did need for almost 3 years… she just left. She blocked us on all her social media and started to spread lies like she never was involved with One In God and that she never promoted unity between hinduism and christianity. She deleted many homepages, posts and maybe 40 Youtube videos where she promoted One In God and unity. And then she started to preach hate against christians. And now she is attacking hindus too. With her lies Sarah Landry is damaging the relations between christians and hindus and is causing hate! https://oig-movement.weebly.com/
[3] We, Indians, really do not understand, who has right to pose like this, she is acting in some Puranic film! Why then, give statement whether she has been planted by Vatican or not! If she had theological or other problems with Bishop Ralph, instead of settling with him, why repeat the same modus operandi here in Tamilnadu?
[4] கத்தோலிக்கர் மட்டுமல்லாது மற்ற கத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகளில் இந்த போலி நடவடிக்கைகளில் இறங்கி ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர்.
[5] இதில் குளூனி போன்றவர்கள் அடங்குவர். ஞானம், பண்டிதத் தனம், திறமை என்று எல்லாம் இருந்தும், குறிக்கோள் மதமாற்றத்தையும்தாண்டி, கடவுளையே மாற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது எடுத்துக் காட்டப் படுகிறது.
[6] ஸ்டீஃப் பார்மர் போன்ற அமெரிக்க “இந்துத்துவ வாதிகளே” செய்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்து மதத்தை தூஷிப்பது, இன்னொரு பக்கம் யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற இரட்டை வேடங்க்களை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.