Archive for the ‘தியானம்’ Category

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்,  தொடரும் இந்துமத தூஷணங்கள்!

June 25, 2020

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்தொடரும் இந்துமத தூஷணங்கள்!

Vivekananda Yoga University, 25-06-2020

முதல் யோகா பல்கலை: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடக்கம்: கடந்த, 21ம் தேதி, உலகம் முழுதும், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே உலகின் முதல் யோகா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 23-06-2020 அன்று திறக்கப்பட்டுள்ளது[1]. விவேகானந்த யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பல்கலை.யில் முதுகலை பட்டப்படிப்புக்காக மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது[2]. . அந்த பல்கலையை, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்[3].  இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக்கழகமானது, உலகெங்கிலும் உள்ள பல முதன்மை பல்கலை.யுடன் கூட்டு ஆராய்ச்சி, திட்டங்களிலும் ஈடுபட உள்ளது[4]. யோகாவில் உயர்கல்வியில் பயில 200 அல்லது 500 மணி நேர சான்றிதழ் படிப்புகளும், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலும் இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இருக்கும். அமெரிக்கக் காரன் விவரமாகத்தான் இருக்கிறான். “அமெரிக்கன் பஜார்” என்ற நாளிதழில் செய்தி இப்படி உள்ளது. இதெல்லாம் சந்தோசமான விசயம் தான். ஆனால், அதே நேரத்தில், அமெரிக்க்கர்கள் யோகாவை ஏற்கெனவே வியாபாரமாக்கியுள்ளதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா மஞ்சளுக்கு பேட்டன் பெற்றது, ஏற்கெனவே யோகாவுக்கும் கேட்டுள்ளது, இனி அது அடைந்து விட்டால், இந்துக்கள் யோகா செய்ய காசு கொடுக்க வேண்டும் போல!

Bikram Choudhury filed a suit claiming patent 2012

லாஸ் ஏஞ்சல்ஸில் பிக்ரம் சௌத்ரி முதல் ஸ்டீவ் பார்மர் வரை: லாஸ் ஏஞ்சலஸ் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டதே, பிரமிப்பாக இருக்கிறது. ஏற்கெனவே, பிரபலமான இருவரின் யோகா கூடங்கள் – பிக்ரம் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டீவ் பார்பர் – அங்கு இருக்கின்றன. பிக்ரம் சௌதுரி (1944- ) 1971ல் லாஸ் ஏஞ்சலஸில் பிக்ரம் ஸ்டுடியோஸ்” என்ற பெயரில் யோகா பயிற்சி மையங்கள் ஆரம்பித்து, நன்றாக சம்பாதித்து, கொடிகட்டி பறந்தார். அமெரிக்கர் 26-யோகா பாவங்கள் / முறைகள் தம்முடையது என்று பேடென்ட் கேட்டு, வழக்கு போட்டார். பிறகு, அமெரிக்க அரசு, அவ்வாறெல்லாம் கோரமுடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது. 2017ல் 73, வயதில் அவரது மீது கற்பழிப்பு, வித்தியாசம் பார்த்தல் போன்ற புகார்களில் வழக்குகள் போடப் பட்டன. 1971ல் உயர்ந்த அவரது வியாபாரம் 2017ல் அப்படியே சரிந்தது. அதாவது அமெரிக்கர்கள் யோகாவை வியாபாரப் பொருளாக மதிக்கும் போது, பேட்டன்ட் எடுப்பதில் ஆச்சரியப் படுவதில் ஒன்றும் இல்லை. ஸ்டீவ் பார்மர் (Steve Farmer) என்ற ஒரு அமெரிக்கன், இப்பொழுதுமே இந்துமதத்தை விமர்சித்துக் கொண்டிருப்பான். யோகாவைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டிருப்பான். ஆனால், அவனது கம்பெனி யோகா சொல்லிக் கொடுக்கிறான். அதுமட்டுமல்ல, யோகா ஆசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கும் “ஆவ்லான்” என்ற யோகா பயிற்சி கூடத்தை, அதே லாஸ் ஏஞ்சலிஸில் நடத்தி வருகிறான். இரா.மதிவாணனை போர்ஜரி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான். இப்படி

Steve Farmer always criticizing Yoga-master of many subjects

வாடிகனும், யோகாவும், இரட்டை வேடமும்: வாடிகனைப் பொறுத்த வரையில் ஆட்டுக்கு நாடு, சர்சுக்கு சர்ச் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆணைகளையிட்டு சாதித்துக் கொள்ளும். 1950களிலேயே காவி வேடத்தில் கிருத்துவ எஸ்.ஜே.க்கள் உலா வந்து, ஆசிரமங்களை ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் ஏசியன் பிஷப் கான்பரன்ஸ் மற்றும் கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா முதலியவற்றில் விவாதித்து தீர்மானித்து தான். 1989ல் சொதப்பலான விளக்க கொடுத்தது[5].  ஆவணத்தில், “கிழக்கத்தைய மத பழக்க-வழக்கங்கள்,” என்று குறிப்பிட்டு, அடிக்குறிப்பில், ஜென், டி..எம், யோக என்று குறிப்பிடுகின்றது[6]. கிருத்துவ ஒத்து-ஊதும் பாதிரிகள் ஆதரவு எழுத்தாளர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. விளக்கம் கொடுத்து, இந்துமதத்தை தூஷிப்பதே வேலையாகக் கொண்டு, முடித்து விடுவர்[8].

Vatican exorcist says Yoga is Satanic 2011

Vatican exorcist says Yoga is Satanic 2011

நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[9]. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய தீரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[10]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!

Pope compares transgenders and nuclear weapons, priest links yoga and Satan 2015, 2019

அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[11]. ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[12]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனிதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல.

Yoga leads to Satan, Satanism Catican

ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[13]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[14]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[15]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.

Yoga leads to Satan, says Northern Ireland priest

யோகா என்பது சாத்தானின் திட்டம், அதை கிருத்துவர்கள் செய்யலாகாது: அது பேயோட்டுதலை விட மோசமானது. அது ஒரு சாத்தானின் ஆன்மீக செயல்பாடாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். சாத்தான் யோகா செய்வது போல சித்தரித்து நக்கல் அடித்தனர். யோகா செய்யும் போது, ஓம் என்று சேர்ந்து மந்திரங்கள் சொல்ல வேண்டும், தியானம் செய்ய வேண்டும். இதெல்லாம், கிருத்துவத்திற்கு எதிரானது. அமெரிக்க-ஐரோப்பிய நாளிதழ்கள், சஞ்சிகைகள், கிருத்துவ வெளியீடுகள் முதலியவற்றில், யோக முத்திரைகள் எல்லாம் சாத்தானின் அடையாளங்கள், சின்னங்கள், 666 என்றெல்லாம் வர்ணித்தனர். படங்கள் போட்டு, யு-டியூப் போன்றவற்றிலும் அதிரடி வெறுப்பு-பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில், காவியுடைக் கட்டிக் கொண்டு, கத்தோலிக்க ஆசிரமங்கள், புரொடெஸ்டென்ட் சாமியார்கள் வலம் வந்து கொண்டிருந்தனர். தங்களை, “ஐயர்” என்று சொல்லிக் கொண்டு, கிராம, அப்பாவி மக்களை ஏமாற்றினர். கிருத்துவ யோகம் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டனர். இதில் கிருத்துவர்களின் இரட்டை வேடம் தான் வெளிப்பட்டது.

© வேதபிரகாஷ்

25-06-2020

Yoga attacked by Vatican

[1] தமிழ்.இந்து, முதல் யோகா பல்கலை. , Published : 17 Feb 2020 07:38 AM, Last Updated : 17 Feb 2020 07:40 AM

[2] https://www.hindutamil.in/news/vetrikodi/news/539930-yoga-university.html

[3] தினமலர், முதல் யோகா பல்கலைக்கழகம், Added : ஜூன் 25, 2020 12:09

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2564446

[5] Vatican document, CONGREGATION FOR THE DOCTRINE OF THE FAITH- LETTER TO THE BISHOPS OF THE CATHOLIC CHURCH ON SOME ASPECTS OF CHRISTIAN MEDITATION, Joseph Card. Ratzinger, Prefect and Alberto Bovonel Titular Archbishop of Caesarea in Numidia, Secretary,

October 15, 1989.

[6] The expression “eastern methods” is used to refer to methods which are inspired by Hinduism and Buddhism, such as “Zen,” “Transcendental Meditation” or “Yoga.” Thus it indicates methods of meditation of the non-Christian Far East which today are not infrequently adopted by some Christians also in their meditation. The orientation of the principles and methods contained in this present document is intended to serve as a reference point not just for this problem, but also, in a more general way, for the different forms of prayer practiced nowadays in ecclesial organizations, particularly in associations, movements and groups.

http://w2.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_19891015_meditazione-cristiana_en.html

[7] Saliba, John A. “Vatican response to the new religious movements.” Theological studies 53.1 (1992): 3-39.

[8] Stoeber, Michael. “Issues in Christian Encounters with Yoga: Exploring 3HO/Kundalini Yoga.” Journal of Hindu-Christian Studies 30.1 (2017): 3.

[9]  http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/

[10] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

[11] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html

[12] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/

[13] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.

[14] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html

[15] http://www.catholic.org/news/health/story.php?id=59107

Vatican instructions on TM, yoga etc, 1969

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)  

May 12, 2018

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)

Clooney, invited Vasudhat at Harvard

குளூனிவின் வைஷ்ணவ ஆராய்ச்சிற்கு உதவியவர்: இவருக்கு உதவி செய்துள்ள சமஸ்கிருத, வைஷ்ணவ மற்றும் இதர பண்டிதர்கள்: குளூனி தனது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் கீழ்கண்டவர்கள் தமக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  1. ஶ்ரீ ராமமூர்த்தி சாஸ்திரி, முந்தைய சமஸ்கிருத கல்லூரி முதல்வர், மைலாப்பூர்.
  2. ஶ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார்.
  3. ஶ்ரீ எம்.ஏ. வேங்கிடகிருஷ்ணன், வைஷ்ணவ ஆராய்ச்சித் துறை, சென்னை பல்கலைக்கழகம்.
  4. ஶ்ரீமதி பூமா. வேங்கிடகிருஷ்ணன்
  5. ஶ்ரீ. அனந்தகிருஷ்ணன்,
  6. ஶ்ரீ மோஹனரங்கன்.

இதைத்தவிர திருமலையில் உதவிய புரபசர், திருச்செந்தூருக்கு செல்ல உதவியவர், சென்னையில் கச்சேரி, நாடகம், சினிமா முதலியவற்றிற்கு அழைத்துச் சென்ற / உதவிய / கூட வந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அமெரிக்காவில் பரஸ்பரமாக, இந்து மற்றும் இந்தியமூலங்கள் கொண்ட புரபசர்கள், பிரபலமானவர்கள் மற்ற முக்க்கியஸ்தர்கள் உதவி வருகிறார்கள். உதாரணமாக, வசுதா நாராயணன் என்பவர், குளுனிக்கு உதவியிருக்கிறார். அதனால் தான் அவர்களது மைலாபூர் உறவினர்கள் அவருக்கு உதவியுள்ளது தெரிகிறது. இங்கு குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் எல்லோருமே பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆனால், “உள்-கலாச்சாரமயமாக்கல்” மற்றும் “உரையாடல்” என்று வரும் போது, முடிவுகள், இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் தான், கவனிக்க வேண்டியிருக்கிறது.  மேலும், குளூனி பதிவு செய்தது போல, இவர்கள் பதிவு செய்யாதது, திகைப்பாக இருக்கிறது.

M.A. Venkatakrishna and Smt Bhooma Venkatakrishnan

தமிழகத்தைச் சுற்றி வந்து நுணுக்கங்களை அறிந்த குளூனி: வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்ற முகாந்திரத்தில் உலா வந்து மைலாப்பூர் பக்கம் சுற்றி வந்தார். திருவாழ்மொழி படிக்கிறேன் என்று விளம்பரம் செய்து கொண்டார். இவரை ஆதரிக்கிறேன் மற்றும் எதிர்க்கிறேன் என்ற ரீதியில் சிலர் வேலை செய்த போது, அவர் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசயங்களை சேகரித்துக் கொண்டு சென்றார். சென்னை, ஶ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு வந்தால், அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு உபசாரம் செய்தவர்களில் பலர் உள்ளனர். பிரான்சிஸ் சேவியர் குளூனியை பல மடாலயங்கள், கோவில்களுக்குள் அழைத்து சென்றுள்ளனர், ஆனால், குளுனி புத்தகங்களை எழுதியது இந்துமதத்தை எதிர்த்து தான். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

Vasudha speaks in India

  1. ஶ்ரீவைஷ்ணவ “சில்லறை விசயங்கள்” எல்லாம், குளுனிக்கு புரிந்து புத்தகங்கள் எழுதும் அளவுக்கு, நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தது யார்?
  2. “மதங்கங்களுக்குள் உரையாடல்” போர்வையில், ஶ்ரீவேதாந்த தேசிகரையும், கத்தோலிக்க சேவியரையும் ஒப்பிட்டு ஏழுதியபோது, பாராட்டுத் தெரிவித்தது ஏன்?
  3. மேரியை, ஶ்ரீ மற்றும் லக்ஷ்மியுடன் ஒப்பிட்டு, “தெய்வீக மாதா, ஆசிர்வதிக்கப் பட்ட மாதா” என்று குளூனி புத்தகம் எழுதியது எவ்வாறு?
  4. “ஹார்வார்ட் தமிழ் நாற்காலி” என்றால் குதிக்கும் இந்துத்துவவாதிகள், இத்தகைய ஹார்வார்ட் புரவசர்களை ஆதரிப்பது ஏன்?
  5. புரவசர் வசுதா நாராயணன் இங்கே வந்தால், கதா-காலக்ஷேபம் செய்கிறார், அங்கோ, குளுனிக்கு “பேச” ஏற்பாடு செய்கிறார்!
  6. ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி என்பவர், ஶ்ரீரங்கத்தில் நடப்பதையெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார், கோர்ட்டுக்கு போகிறார்!
  7. “மதங்கங்களுக்குள் உரையடல்” இந்துத்துவவாதிகள் என்றாவது நடத்தியுள்ளனரா? பிறகு, ஒருவழியாக அவர்களை அனுமதிப்பது / புலம்புவது ஏன்?

Fr Clooney SJ - Vidyajoti- lecture -2011

2011லேயும் குளூனி சென்னை கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்றிருக்கிறார்[1]: சத்யஜோதி என்ற கிருத்துவ கல்லூரியில், ஜூலை 27, 2011 அன்று பைபிள் மற்றும் திருவாய்மொழி ஒப்பிட்டு சொற்பொழிவாற்றினார்[2]. “சத்யஜோதி” இரு ஜெசுவைட் கல்லூரி, அதனால் அங்கு வரவேற்க்கப்பட்டது, பேசியது எல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மற்ற மதங்களுடைய நூல்கள் எப்படி பைபிள் படிக்க உதவும் என்று அவர் எடுத்துக் காட்டியதிலும் வியப்பில்லை. ஆகஸ்ட் 2, 2011 அன்று எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியிலும், கிறிஸ்துவ-இந்து மதங்களை ஒப்பிட்டு பேசினார்[3]. இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கெனவே, குளூனியின் புத்தங்கள் வெளிவந்த பிறகு, அவற்றின் சர்ச்சை ஏற்பட்ட பிறகு, அவர் எப்படி அங்கு வரவேற்க்கப் பட்டு பேசினார் என்பது வினோதம் தான். ஆகஸ்ட் 5, 2011 அன்று, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தத்துவ துறை சார்பாக சார்பில் நடந்த கருத்தரங்கத்திலும், மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து பேசினார்[4]. அதாவது, 1992-93 விஜயங்களின் போது, சென்னையில் இவரைத் தட்டிக் கேட்டதாலும், நேரில் வந்து கேள்விகள் கேட்டதாலும், இவையெல்லாம் விளம்பரம் இல்லாமல் நடத்தப் பட்டதாகத் தெரிகிறது அல்லது அந்த அளவிற்கு மற்றவகளுக்குத் தெரியும் வகையில் அறிவிக்கப்படவில்லை. மேலும் 2011ல் உடனடியாக, இதைப் பற்றி பதிவு செய்தேன். ஆதாரமாக, இணைதள லிங்குகள் முதலியவற்றைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது, அவையெல்லாம் மறைந்து விட்டன. “இந்து பிசினஸ் லைன்” மட்டும் இன்றளவில் உள்ளது. ஆகவே, இவ்விவகாரங்களை மறைப்பதிலும் ஈடுப்பட்டுள்ளது தெரிகிறது.

Clooney- gave Radhakrishna lecture -2011

இந்துக்கள், கிறிஸ்தவர் போல உரையாடல்களில் ஈடுபடுவதில்லை: இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள் யாரும் கிருத்துவர்களுடன் உரையாடல் நடத்தி, இந்துமதம் தான் தொன்மையானது, அதிலிருந்து தான் தத்துவம் முதலியவற்றை மற்ற மதங்கள் எடுத்தாண்டன என்றெல்லாம் எடுத்துக் காட்டுவதில்லை. ஜைனம் மற்றும் பௌத்தம், 2500 ஆண்டுகளுக்கு முன்னமே அத்தகைய உரையாடலில் ஈடுபட்டதும், இந்து மதத்தின் தொன்மையினைக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவம், இவ்விசயத்தில் எந்த தொன்மையினையும் காட்ட முடியாது. காலக்கணகியலே, அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி விடுகிறது. அயல்நாடுகளுக்கு சென்றவர்கள், செல்கிறவர்கள், அந்தந்த நாடுகளின், நிறுவனங்களின், இயக்கங்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆராய்ச்சி செய்து, பட்டங்களைப் பெற்று, வசதியாக இருந்து விடுகின்றனரே தவிர, சிலர் தான், பிரச்சினையை உணர்ந்து எதிர்க்கிறார்கள்[5].  இந்தியாவிற்கு வரும் போது அல்லது இணைதளங்களில், ஏதோ, இந்துக்களுக்கு போராடுவது, ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அங்கு, பணியிடங்களில் “சலாம்” போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் பதவி போய்விடும், கீழே தள்ளப்படுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

NOP Vaishnava college, Clooney- resource person

இந்தியாவில் இருப்பவர்களுக்குஉரையாடல்நுணுக்கங்கள் தெரியாது, ஆவணப்படுத்துவதில்லை: இந்து கோணத்தில் “உரையாடல்” என்றால் என்ன, கிருத்துவம் அல்லது முகமதிய மதங்களுடன் “உரையாட” வேண்டிய அவசியம் என்ன, அவ்வாறு நிலை வந்தால், என்ன பேசுவது, விவாதிப்பது, நிலைநாட்டுவது, முடிவுக்கு வருவது மற்றும் இறுதியாக ஆவணப்படுத்துவது போன்ற விசயங்களை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு கிருத்துவன் அல்லது முகமதியன் கூட பேசினால், “உரையாடல்” ஆகாது. மேலும், ஆங்கிலத்தில் “என்கவுன்டர்” என்ற பிரயோகம் [encounter, எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நில்] செய்வது எதிர்மறையாக இருக்கிறது. ஆனால், “வாய்ஸ் ஆப் இந்தியா” போன்ற “இந்து-சார்பு” பதிப்பங்களே அத்தகைய பிரயோகங்களை செய்து வருகின்றது[6]. இந்தியாவில் இருப்பவர்களோ, ஏதோ கிருத்துவர்களுடன் பேசினாலே “உரையாடல்” ஏற்பட்டு விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால், ஆவணப்படுத்துவதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில்லை. எம்.டி. ஶ்ரீனிவாஸ் என்பவர், “சத்திய நிலையத்துடன்” நெருக்கமான தொடர்பு வைத்திருந்தாலும், தனது கட்டுரை பதிப்பாயிற்று என்ற நிலையில் அமைதியாக இருந்தார். அங்கு தங்கியிருந்த குளூனியிடம் என்ன பேசினார் என்று ஆவணப்படுத்தவில்லை. அதேபோல, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிக் கொண்டாலும் ஆவணப்படுத்தவதில்லை.

© வேதபிரகாஷ்

11-05-2018

Jesus trail in India, The Hindu 20-11-2007

[1] கீழ்கண்ட லிங்குகள் வேலை செய்யவில்லை / காணாமல் போய்விட்டது என்பதால், என்னுடைய பிளாக்கின் லிங்கைக் கொடுக்கிறேன்: https://vaticanculturation.wordpress.com/2011/08/12/95-the-christian-vaishnavite-dialogue-continues-clooneys-2011-visit-to-chennai/

[2] Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ  This was the topic of the special lecture given by Prof. Francis Xavier Clooney SJ at Vidyajyoti on July 27, 2011. He spoke of the importance of reading the texts of other religions while doing Christian theology.  Dr. Clooney illustrated his ideas by bringing together select texts from Song of Songs of the Bible and Tiruvaymoli of the Tamil bhakti tradition. The scholarly lecture was very enlightening and led to a lively discussion moderated by Fr. George Gispert-Sauch SJ, an eminent Indologist and emeritus Professor at Vidyajyoti.

http://www.americamagazine.org/blog/blog.cfm?blog_id=2&category_id=4A03E29A-3048-741E-7E0C76FB5CD0D40D

Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ By Vidyajyoti College of Theology, August 3, 2011;  http://vidyajyoti.in/?p=1275

[3] Addressing a seminar on Dynamics of Religious Trajectories: Continuities and Changes, Traditions and Improvisations at the M O P Vaishnav College here, Clooney said traditions were not the things of the past, they could cha-nge the world. He said religion was not static and it kept changing as the modern world. “God is like a lover and tends to change. We can’t restrict him saying he belongs to me,” he said.

‘God Is like a lover, can’t restrict him’,  Express News Service, Last Updated : 03 Aug 2011 09:23:22 AM IST, http://expressbuzz.com/cities/chennai/god-is-like-a-lover-can%E2%80%99t-restrict-him/300447.html.

[4] Department of Philosophy organized Dr. Sarvepalli Radhakrishnan Endowment Lectures on 5th August 2011. Prof. Francis X. Clooney, Parkman Professor of Divinity and Director of the Center for the Study of World Religions, Harvard University, USA delivered two lectures on theme “Comparative Theology as 21st Century Christian Theology” and “The Drama of a God Who Comes and Goes: Reading the Biblical Song of Songs with the Srivaishnava Thiruvaymoli“. The Principal, Dr. R.W. Alexander Jesudasan presided over the function and the Bursar, Mr. C. Sundaraj and student and faculty of various departments were present on the occasion.

http://www.mcc.edu.in/index.php?option=com_k2&view=item&id=135:dr-sarvepalli-radhakrishnan-endowment-lectures&Itemid=530

[5] கியானால்ட் எல்ஸ்ட், வாமதேவ சாஸ்திரி, மைக்கேல் டேனினோ, ராஜிவ் மல்ஹோத்ரா, நரஹரி ஆச்சார், கோஸ்லா வேபா, போன்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்க / ஐரோப்பிய குடிமகன்கள் என்ற முறையில், இவர்களுக்கும், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

[6] Hindu-Christian Encounters, Voice of India, New Delhi.

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் – பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

May 12, 2018

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

Clooney, Hindu-christian dialogue-with Hindu Swami

கிருத்துவர்களின் போலித்தனம்உள்கலாச்சாரமயமாக்கலும், இந்தியஇந்து எதிர்ப்பும்: உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு வாழ்ந்து, சரியான சமயம் வரும்போது, எல்லோரும் “கிருத்துவர்கள்” என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால், இதுவரை, எந்த இந்துவும் கிருத்துவன் அல்லது முகமதியன் போல வேடமிட்டு, நடந்து கொண்டு, அம்மத நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களைப் போல ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியாதாகத் தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல இந்து குடும்பங்களில் கிருத்துவ மாப்பிள்ளை மற்றும் மறுமகள், தாய் அல்லது தந்தை, மாமியார் அல்லது மாமனார் இருப்பது சகஜமாகி விட்டது. ஆனால், அவர்கள் அதை இந்தியாவில் தங்களது உறவினர்களிடம் கூட சொல்வதில்லை. இப்பொழுது மூன்றாம்-நான்காம் தலைமுறைகள், இந்திய உறவுகளை, சொந்தங்களை, மூலங்களை மறந்து விட்டனர். அவர்களால், இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆகவே, அவர்களிடமிருந்து, இந்துக்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டுவிடலாம்.

Clooney, Hindu-christian dialogue-with Hindu ISKCON and Swaminarayan Swamis

இவ்விசயங்களில்இந்துஎதிர்ப்பில், கிருத்துவப் பிரிவுகள், டினாமினேஷன்கள் ஒத்துப் போவது: பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue), மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா, சுலோகங்கள் சொல்வது, பொங்கல், தீபாவளி கொண்டாடுவது முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Protestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

Clooney, Bama Gopalan, Kumudam

ஒருதலைப் பட்சமான, போலி உரையாடல்கள்: “உரையாடல்” [dailogue], “மதங்கங்களுக்குள் உரையாடல்” [inter-religious dialogu], “மதங்களுக்குள் இடையே உரையாடல்” [inter-faith dialogue] என்ற ரீதியில் கிருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்துக்களுக்கு அது தெரியாது. படித்தவர்கள், “எல்லாம் மதங்களும் ஒன்று,” “எல்லா மதங்களும் ஒன்றைத் தான் போதிக்கின்றன,” “ஒளி பலவென்றாலும் வெளிச்சம் ஒன்று”, என்று ஏதோ மேலெழுந்தவாரியாக அல்லது முற்றும் துறந்த முனிவர் போல பேசும் ரகங்களைத் தான், இந்து சாமியார்களிடம், மடாதிபதிகளிடம், “துறவி” போன்ற வகையறாக்களில் காணப்படுகின்றன. இவர்களால் இக்காலநிலையில், இந்துக்களும், நன்மையை விட, எதிர்மறையான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்திய மதநூல்களை எல்லாம் படித்து விட்டு, அதில் சொல்லப் பட்டிருக்கின்ற இந்து கடவுளர் எல்லாமே, கிருத்துவ மதத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டது, பெறப்பட்டது என்று முடிவாக விளக்கம் கொடுப்பது தான் அவர்களது திட்டம். மறைந்துள்ள ஏசு, உள்ளேயிருக்கும் கிறிஸ்து, ஞானகுரு என்றெல்லாம் சொல்வது அவர்களது வழக்கம். ஆனால், செக்யூலரிஸ, முட்டாள் மற்றும் படிக்காத இந்துக்கள் இதனை அறிந்டு கொள்வதில்லை.

Clooney, Vasudha Narayanan

கிருத்துவர்களின் கட்டுக்கதை மோசடிகள்: ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திர ரீதியில் இல்லை என்று மேனாட்டில், கடந்த 200 வருடங்களில் பெரிய-பெரிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டி விட்டனர். இதனால், கிருத்துவர்கள், கிருத்துவ மதத்திற்கு சரித்திர ஆதாரம், தொன்மை முதலியவை குறைவு மற்றும் இல்லை என்ற ரீதியில், மற்றவற்றின் சரித்திர ஆதாரங்கள், தொன்மை முதலியவற்றை தமது போல காட்டிக் கொள்ள, ஆவணங்களை திரித்து எழுதி, போலி ஆதாரங்களை உருவாக்கி, ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். இவையெல்லாம் இன்றும் தொடர்ந்து வருகின்றன. “அதையும்-இதையும் இணைத்து, இரண்டும் ஒன்று” என்ற ஏமாற்று சமன்பாட்டை வைத்து, ஏமாற்றி வரும் போது, நம்பி மோசம் போவது, இந்துக்கள் தாம். “தாமஸ்கட்டுக் கதை,” “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக்கதைகளின் பின்னணி இதுதான். இதெல்லாம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, மோசடி என்றெல்லாம் அடிக்கடி வெளிப்பட்டாலும், வெட்கமில்ல்லாமல் தொடர்ந்து செய்வது தான் அவர்களது கை வைந்த கலை. ஏனெனில், அத்தகைய விவரங்கள் ஒருசிலருக்கே தெரியும் மற்றவகளுக்குத் தெரியாது என்ற நிலையில், மோசடிகளை செய்து வருகின்றனர்.

Nuns inside Srirangam temple -08-05-2018

ஶ்ரீரங்கமும், கிருத்துவர்களும்: ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் கிருத்துவர் நுழைந்து விட்டார்கள் என்று புலம்புகின்றனர் “இந்துத்துவ வாதிகள்”, ஆனால் கிருத்துவர்களுக்கு உதவுவது இவர்களில் சிலர். 08-05-2018, செவ்வாய்கிழமை அன்று கன்னியாஸ்திரிக்கள் நுழைந்தது “குளூனி” விஜயம் போன்றதா என்று ஆராய வேண்டும்[1]ஏனெனில், குளூனி அங்கு வந்து சென்றபோது, யாரும், இந்த அளவுக்கு போட்டோ, போட்டு கேட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக வெளிநாட்டினர், மற்ற மதத்தினர் கோவிலில் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப் படுவது உண்டு[2]. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இவர்கள் செயலாற்றுவதால் பலனில்லை. ஒரு ஶ்ரீரங்கத்து ஜீயருக்கும் அங்கிருக்கும் ஒரு கிருத்துவ செமினரி பாஸ்டருக்கும் நட்பு என்ற ரீதியில், ஜீயர் பாஸ்டருக்கு மாலை போட்டு கௌரவித்திருக்கிறார், இதை அந்த பாஸ்டரே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், எந்த சர்ச்சோ, செமினரியோ, கிருத்துவ மடாலயமே, இந்துவை உள்ளே விடுவதில்லை. அப்படியே, யாராவது சென்றாலும், “ஏதாவது ஒரு காரணாம் சொல்லி” திருப்பி அனுப்பப் படுவர்.

Francis Clooney at Laksmi temple

பிரான்சிஸ் சேவியர் குளூனி கோவில்களுக்குள் சென்று வந்தது: பிரான்சிஸ் சேவியர் குளூனி [ஹார்வார்ட் புரபசர்] என்பவர், தமிழகத்திற்கு பலமுறை வந்து, கிருத்துவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒப்பீட்டு செய்து ஆராய்ச்சி செய்கின்றேன் என்ற விதத்தில் வந்து போக ஆரம்பித்தார். 1982-83, 1992-93, 2011 என்று பல வருடங்கள் வந்து, வருடத்திற்கும் மேலாக தங்கிருந்தார். “ஐக்கிய ஆலயம்” இவருடைய தங்கியிருந்த இடம், அங்கு தான் இக்னேசியஸ்ஸ் இருதயம் என்பவர் இவரை நன்றாக கவனித்துக் கொண்டார். வெஇயில் வரும்போது, கதர் சர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்ததால், ஏதோ அமெரிக்க பிராமணர் அல்லது “”ஹரே கிருஷ்ண” கோஷ்டி என்று நினைத்துக் கொண்டனர். இதனால், சைக்கிளில் ஊர்வலம் வந்து சென்னை முழுவதும் சுற்றி வந்து, ஏகப்பட்ட கோவில்களுக்கு சென்று வந்துள்ளார். அம்மன் கோவில்கள் இவருக்கு தனிப்பட்ட விருப்பமாகும். தமிழைக் கண்டு கொண்டுதால், அப்படியே பேசி சமாளித்து சமாளித்துள்ளார். பணத்தைப் பொறுத்த வரையில் கவலை இல்லை. தாராளமாகவே செலவழித்திருக்கிறார். தமிழகத்தை பஸ், ரெயில் என்று பயணித்து பற்பல கோவில்களுக்கு சென்று வந்தார். ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் உள்ளூர் நண்பர்கள் உதவியுள்ளனர். திருமலை கோவிலுக்கு 1983 மற்றும் 1992 என்று இரு முறை சென்றுள்ளாதாக அவரே பதிவு செய்துள்ளார். அங்குள்ள பட்டரின் நண்பரான புரபசர் அவருக்கு உதவியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-05-2018


Fr Clooney SJ - lecture -2011

[1] The Hindu, Christian nuns’ visit to temple causes flutter, R. Rajaram, TIRUCHI, MAY 10, 2018 00:00 IST; UPDATED: MAY 10, 2018 05:11 IST

[2] The visit of a group of Christian nuns to Sri Ranganathaswamy Temple in Srirangam on Tuesday evening caused a flutter on social media. The visit raised a furore after allegations were made on a social networking site that the nuns in their religious attire started to pray taking out their rosaries while inside the temple. Photographs showing a group of nuns standing and walking near Thousand Pillar Mandapam were also widely circulated on online messaging platforms. Officials of the Hindu Religious and Charitable Endowments Department said the nuns had come from Kerala as tourists and were indeed in their religious attire, but did not pray with rosaries inside the temple. The nuns were near the Thousand Pillar Mandapam at the outer prakaram when it was brought to the notice of the temple authorities by some devotees. Temple officials said the nuns were politely asked to leave the premises as they were in their religious attire. The nuns left the temple immediately, an official said. Although people of other faiths, including foreign nationals, were permitted inside the temple, they were not allowed beyond the Aryapadaal entrance. Visitors of other faiths were not allowed inside any of the Sannidhis as well, the temple authorities explained.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nuns-visit-to-temple-causes-flutter/article23830818.ece

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)!

May 20, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)!

Yoga, Pope, Jesus, Satan - all together

Yoga, Pope, Jesus, Satan – all together

மூச்சடைப்பு வித்தையிலிருந்து, ஏசு-மேரி மேக்தலின் கதை வரை: மூச்சை அடக்கினால், மனதை அடக்கலாம், சிந்தனைகள் ஒருமிக்கும், அவை ஏசுகிறிஸ்துவுடம் செல்லும் என்று சொல்லிக் கொடுத்து, யாகாவை கிருத்துவத்தில் நுழைத்து ஏற்றுக்கொண்டனர். ஒரு நிலையில், ஏசுதான் யோகாவின் தலைவர், அவர் தான் முதன் முதலில் யோகாவைக் கண்டுபிடித்தார், இந்தியர்கள் அவரிடமிருந்து காப்பியடித்தனர் என்றா ரீதியில் புத்தகங்களில் எழுதி வைத்தனர். இதனால் தான், ஏசு தனது இறுதி நாளில், சிலுவையில் மரிக்காமல், உயிர்த்தெழுந்து, மேரி மேக்தலினுடன், கார்ஷ்மீரத்திற்கு வந்து, தனது இறுதி நாட்களைக் கழித்தார். அவருக்கும், மேரி மேக்தலினுக்கும் குழந்தைகள் பிறந்தன. அவை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப் பட்டனர். அவர்கள் வழிவந்த வம்சம் தான் மெரோவிங்கியன் போன்றவை. “கிரைல்” எனப்பட்ட, “அட்சயப் பாத்திரம்” அக்குடும்பத்தாரால், ரகசியமாக பாதுகாத்து வைக்கப்பட்டது, என்றெல்லாம் புதுப்புது கதைகளை உருவாக்கினர். மேற்கத்தைய நாகரிகத்தில், ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திரரீதியில் இல்லாதது என்று ஒதுக்கிவைத்த நிலயில், இந்தியாவுடன் தொடர்பு படுத்தி, அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர். அந்நிலையில், இந்த யோகாவை கையில் எடுத்துக் கொண்டனர். “கிறுஸ்துவ யோகா யூனியன்” என்றெல்லாம் பெயரிட்டு, யோகா மையங்களை ஆரம்பித்தனர்.

Vatican exorcist says Yoga is Satanic 2011

Vatican exorcist says Yoga is Satanic 2011

யோகாகுருவாகச் சித்தரிக்கப் பட்ட ஏசு எப்படி திடீரென்று மறுக்கப்பட்டார்?: யோகா விசயத்தில் கிருத்துவர்களின் போலித்தனம், மோசடி வேலைகள், இரட்டை வேடங்கள் என்று எல்லாமே வெளிப்பட்டன. கத்தோலிக்க ஆசிரமங்களில் காவியாடை வேடங்களுடன் முக்கியமாக, தியானம் மற்றும் யோகா முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, பின்பற்றப்பட்டன. யோகா சொல்லிக் கொடுக்க குரு வேண்டும் என்றபோது, அவர்களே “குருவாகி” யோகாபயிற்சியை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். “மூலமந்திரம்” குருவினால் போதிக்கப்படவேண்டும், என்றபோது, “ஏசுவாய நமஹ”, “கிறிஸ்துவாய நமஹ” என்று போலி மந்திரங்களை உருவாக்கிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். போதாகுறைக்கு, ஏசுகிறிஸ்துவையே யோகாகுரு மாதிரி மாற்றிவிட்டனர். அத்தகைய சித்தரிப்புப் படங்கள் உலகம் முழுவதும் உல்லா வந்தன! 1965 முதல் 1989 வரை எல்லாமே ஏற்றுக்கொள்ளப் பட்டவை, ஒப்புக்க்கொள்ளப்பட்டவை, எப்படி திடீரென்று வேறுவிதமாக மாறியது என்று தெரியவில்லை. கத்தோலிக்க ஆசிரமங்கள் இவ்வாறு யோகா முறைகளில், எல்லைகளைக் கடந்து செல்வதை, கண்டிக்க வேண்டும், வேறுவழியில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, கத்தோலிக்கப் பாதிரிகள், முதலில் கண்டிக்க ஆரம்பித்தனர். இறுதியில், போப்பை வைத்து தடையாணையைப் போட்டனர்.

Christ, yoga, confusion, Satanic for them

Christ, yoga, confusion, Satanic for them

ஓமில் இருந்து ஏசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட்டார்!: யோகா என்பது பொதுவானது, அது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்பு படுத்த முடியாது என்றும், கிருத்துவ அறிவுஜீவிகள் சொல்ல ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் சிலர் அதற்கு “உரிமை” கொண்டாடவும் முயன்றனர். அமெரிக்காவில், இந்துமதத்தை எதிர்க்கும், ஸ்டீப் பார்மர் போன்ற ஆசாமிகள், “யோகா” சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால், 1989ல் இந்த பிரச்சினையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, டிசம்பரில் 23 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தின் மூலம், கிருத்துவர்கள் அத்தகைய முறைகளைப் பின்பற்றக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளக்கம் அளித்தது. இது தவிர நவீன கால இயக்கம் (The New Age Movement) என்ற கிருத்துவர்களின் வேலகளையும் போப் கண்டித்தார்[1].  பௌத்தர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு, பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த, கிருத்துவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொறுந்தும். எனினும், அவர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. போப்போ தியானம் மற்றும் யோகா முறைகள் கிருத்துவர்கள் கண்மூடித்தனமாக செய்யக் கூடாது என்று கண்டித்ததையும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே பிரபலப்படுத்தவில்லை[2]. ஆக, யோகா-குரு கிருஸ்து மறுபடியும், சிலுவையில் ஏற்றபட்டார்!

Crossing the threshold - Pope condemning Yoga etc, 1989

Crossing the threshold – Pope condemning Yoga etc, 1989

யோகா சாத்தானின் செயல்: பால் எச்சரிக்கை செய்தபடி, சாத்தானே தேவதை போல வேடமிட்டு வருகிறான் [Paul warns that “Satan himself masquerades as an angel of light” (2 Cor. 11:14). அதனால், அத்தகைய பிரயோகங்களை செய்யலாகாது என்று விளக்கம் கொடுத்தனர்[3]. பிறகு மெத்தப்படித்த பேட் கிரிபித்ஸ். அமலோர்பவ தாஸ், லூர்துசாமி முதலியோருக்கு அவையெல்லாம் தெரியாமலா போயின? பிறகு எதற்கு அத்தகைய, சத்தானின் கிரியைகளை ஊக்குவித்தனர்? அப்படியென்றால், 1989 முதல் 2014 வரை அவர்களது சாத்தானின் காரியங்களை ஏன் ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தனர்? பைபிளில் சங்கீதத்தில் வரும், “தியானம் என்றால், கடவுள் எப்படி உண்மையினை வெளிப்படுத்தியுள்ளாரோ அவற்றை நினைப்பதுதான். உங்களுடைய தத்துவங்களை மற்றும் வழிகளை கருத்திற்கொள்வேன் மற்றும் தியானிப்பேன்; உங்களது ஆணைகளை ஏற்றுக்கொள்வேன்; உங்கள் வார்த்தையினை நான் மதிக்காமல் இருக்கமாட்டேன், என்றெல்லாம் பைபிளில் உள்ளவற்றின்படித்தான் தியானம் செய்ய வேண்டும்”, என்று விளக்கம் கொடுக்கப்பட்டது[4]. அதை விடுத்து, வேறு முறைகளைக் கையாடுதல் கூடாது[5], ஏனெனில், அவை கடவுளுக்கு உகந்தததல்ல என்றுதான் போதிக்க ஆரம்பித்தனர். யோகாவை ஏசுகிறிஸ்துவுடன் இணைத்த மேதாவிகள், காவி-அறிவுஜீவிகள், பாஷாண்டிகள், பிரகஸ்பதிகள் எப்படி திடீரென்று இவ்வாறு மாறினர் என்று தெரியவில்லை?

யோகா சாத்தானின் வேலை

யோகா சாத்தானின் வேலை

நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[6]. இவர் தனது 85 வயது காலத்தில், 25 வருடம் வாடிகனில் அந்த வேலையை செய்து வருகிறார். இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பேய்-பிசாசுகளை ஓட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய திரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[7]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!

யோகா, போப், ஏசு

யோகா, போப், ஏசு

அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[8].  ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனுதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல. ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[10]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[11]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[12]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

20-05-2015

Pope compares transgenders and nuclear weapons, priest links yoga and Satan 2015, 2019

[1]  Pope John Paul II, The threshold of Hope,

[2] Ram Swarup, Pope Johj Paul II on Eastern Religions and Yoga – A Hindu-Buddhist Rejoinder, Voice of India, New Delhi, 1995.

[3] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html

[4] In the Bible, meditation always means pondering God’s revealed truths and reflecting on how they pertain to us. David revels in the richness of God’s law throughout Psalm 119. He encourages us to meditate on it: “I meditate on your precepts and consider your ways. I delight in your decrees; I will not neglect your word” (Ps. 119:15-16). Since all Scripture is God-breathed (2 Tim. 3:16), all of it is profitable for meditation in the biblical sense.

[5] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html?start=2

[6] http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/

[7] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

http://www.dailymail.co.uk/news/article-2066289/Yoga-work-devil-says-Vaticans-chief-exorcist-doesnt-like-Harry-Potter-either.html

[8] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html

[9] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/

[10] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.

[11] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html

[12] http://www.catholic.org/news/health/story.php?id=59107

Yoga leads to Satan, says Northern Ireland priest