Archive for the ‘உடலுறவு’ Category

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (8)!

May 17, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (8)!

Crusade against Hindus-Inculturation

Crusade against Hindus-Inculturation

உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விசயத்தில் வாடிகன் கூறுவது[1]: “இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது”.

Using  Swami Vivekananda for propaganda, highly misleading

Using Swami Vivekananda for propaganda, highly misleading

எண் வாடிகன் ஆவணம் கூறுவது அதன் விமர்சனம்
1 இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. உண்மையானதும் புனிதமானதுமானவற்றை, கத்தோலிக்கம் ஏதோ அறிந்து கொண்டு சான்றிதழ் கொடுக்கும் அகம்பாவ-ஆணவரீதியில் இருந்த நிலை
2 தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. பலவற்றில் வேறுபடினும் என்று ஒப்புக் கொண்டு விட்டு, “திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது” என்பது இரட்டைவேடத்தைக் காட்டியது. இந்துமதத்தில் உள்ளவை சிறந்தவை என்றா ஏற்றுகொள்ளவேண்டும், அபகரித்து, கிறிஸ்துவுடையது என்று பொய் பேசக்கூடாது.
3 உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். கிறிஸ்தவத்தில் இல்லாதவை, இந்துமதத்தில் இருக்கும் போது, அவை எப்படி கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது, என்று பொய் பேசலாம்; என்றும் அறிவிக்கவும் வேண்டும், என்று திட்டம் போடலாம்?
4 அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். இது பொய் மீது, பொய்களை வைத்து, வளர்க்கும் அபாண்ட புளுகு மூட்டையாகிறதே?
5 எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; இப்படி பொய் சொல்லிக் கொண்டு, உரையாடல் நடத்தினால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஓடும் நிலைத்தான் ஏற்படும்.
6 அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். ஆமாம், பொய்க்கு ஆதரவாக இருந்தால், ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் போலும்.
7 இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது இதுவரை, கிறிஸ்தவல், இந்தியாவில் அழித்தவை தான் அதிகம், இன்றும் அழித்து வருகின்றது. அந்நிலையில் இத்தகைய அபாண்டமான பொய்களை கூறவேண்டிய அவசியம் என்ன?
One song, many truths

One song, many truths

இந்து மதமும், இந்துமதம் அல்லாத பிற மதங்களும்: கிருத்துவத்திற்கு மூலத்துவம் (Originality), முதலத்துவம் (Primitivity), தனித்தன்மை (Independent unique position) இல்லாததினால், ஒரு தாழ்வு மனப்பாங்கோடு, மற்ற மதங்களின் மீது தீவிரமான தாக்குதல், ஆக்கிரமிப்பு, அபகரிப்பு போன்ற செயல்களில் அதிகமகவே ஈடுபட்டு வந்துள்ளது. கிருத்துவமதம், இடைக்காலத்தில் தான் ஓரளவிற்கு சித்தாந்தங்களை எல்லாம் கூட்டி, சேர்த்து, கழித்து, ஒருவழியாக மதமாக உருவாக்கம் அடைந்தது. முகமதியம் வன்முறை மூலம் பிரபலமடைந்த நிலையைக் கண்டு, தானும் அதே வழியில் இறங்கியது. இரண்டு மதங்களும் சண்டையிட்டுக் கொண்டன. போர், வன்முறை கொலைகள், முதலியவற்றால் அமைதி, சாந்தம், நிம்மதி, ஆன்மீகம், அருள், முதலியவை வரவில்லை. மதநம்பிக்கையில் என்றுமே எதேச்சாதிகாரம், காலனிய அடக்குமுறைகள், முதலாளித்துவம், சர்வாதிகாரம், முதலிய கொள்கைகளுடன் செயல்பட முடியாது. ஆனால், சண்டை-சச்சரவு இல்லாமல், இன்னொரு மதம் எல்லா உலகத்தில் இடங்களிளும் பரவியிருந்தது கண்டு திகைத்து விட்டனர். ஆக பொருட்கள், சேவைகள் மட்டுமல்ல, மற்ற மதம் பற்றிய விசயங்களும் அங்கிருந்துதான் வருகின்றன என்று அறிந்து கொண்டனர். அதுதான் இந்துமதம் என்றறிந்த போது, அதன் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஜைனம், பௌத்தம் மற்றும் சீக்கியம், இந்துமதத்திலிருந்து தோன்றியதால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிக போன்ற காரணிகளால் வேறுபடவில்லை. ஆனால், அடக்குமுறைகளினால் உள்ளே வந்த முகமதியம் மற்றும் கிருத்துவம் மக்களிடையே செல்வாக்குப் பெறமுடியவில்லை.

Jesus picture in Toronto RKM Mutt

Jesus picture in Toronto RKM Mutt

இல்லாதவர்கள் தாம்,வைருப்பவர்களிடம் கையேந்த வேண்டும்: கிருத்துவமதமே ஒரு மதம் இல்லை, ஏனெனில், அது பற்பல மத நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், நாகரிகங்களை எல்லாவற்றையும், அபகரித்துக் கொண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம்-கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு, சேர்த்து வளர்ந்த மதம் ஆதலால், மூலத்துவம், முதலத்துவம், தனித்துவம் முதலியவற்றை அதில் எதிர்பார்க்க முடியாது. எனவே பலவற்றிலிருந்து பெற்ற ஒன்று பலவாகவே பிரிந்து போவதில் வியப்பிலை. அதனால் தான், கிருத்துவத்தில் இன்று பல்லாயிரக்கணக்கில் மதப்பிரிவுகள் (denominations), இறையியல் கோஷ்டிகள் (Theological divisions) மற்றும் வகுப்புவாதக் குழுக்கள் (Sectarian groups) இருகின்றன. அதாவது, இல்லாமல் கடன் / தானம் வாங்கி ஆரம்பித்தது அவ்வாறே பிரிந்து விட்டது. இல்லாதவர்கள் தாம், இருப்பவர்களிடம் கையேந்த வேண்டும். எப்பொழுது, உரையாடல் என்று இறங்கி விட்டார்களோ, அப்பொழுதே, அவர்களிடம் சரக்கு, சிறப்பான விசயம், முதலியவை இல்லை என்று தெரிகிறது. எனவே, பிச்சையெடுப்பவர், கையேந்திக் கொண்டு, பவ்யமாகத்தான், வந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், அதிகாரத் தோரணையில் செயல்பட முடியாது. கிருத்துவ மதம் சரித்திர ரீதியிலாக புதிய மதம் என்றதால், ஆரம்பத்திலிருந்தே, ஏற்கெபனவே இருந்த மதங்களிலிருந்து உள்ளவற்றை அபகரித்து, தனதாக்கிக் கொண்டு, பல உருவங்களில் உருவெடுத்து, 13-14ம் நாற்றாண்டுகளில் ஒரு நிலையை அடந்தது.

இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம்: உலகத்திலேயே, இந்து மதத்திற்கு மட்டும் தான், எல்லாமே ஒரே இடத்தில் இருக்கின்றன. அதாவது, அந்த இடத்தில் தோன்றியதால், அந்த பாரம்பரியம், கலாச்சாரம் முதலிய காரணிகளுடன் சேர்ந்து வளர்ந்து, வாழ்ந்து, தொடர்ந்திருப்பதால், எல்லாமே அங்கேயே அடங்கிவிடுகின்றன. தத்துவம், இறையியல், ஆன்மீகம், தர்க்கம் மற்றும் கலை, விஞ்ஞான, தொழிற்நுட்பங்களும் அந்நம்பிக்கையாளர்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பல்லாயியக் கணக்கான வருட மாறுதல்கள் இருந்தாலும், இன்றும் அவர்கள், ஒரு பகுதியிலிருந்து, இன்னொருப் பகுதிக்குச் சென்றால், அங்குள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. என்னத்தான், மேலே புதியபூச்சு பூசப்பட்டிருந்தாலும், உள்ளே இருக்கும் இந்தியத்துவம் வெளிப்படுகிறது. எப்படி பலதரப்பட்ட இந்திய நாட்டியமுறைகளில், வெவ்வேறு சங்கீத பாரம்பரியங்களில், பேசும் பலமொழிகளில் ஒற்றுமைக் காணப்படுகிறாதோ, அடிப்படையிலான ஒற்றுமையுள்ளதோ, அதே போல உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றில் அத்தகைய ஒற்றுமைகள் உள்ளதை மக்கள் சொல்லாமலேயே அறிந்து கொள்கிறார்கள் அதுதான், இந்தியநாட்டின் சிறந்தத்தன்மை. ஆனால், இப்பொழுது இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம் என்று பேசி குழப்பப் பார்கிறார்கள். நாட்டியம் மற்றும் தேசியம் என்று பேசி பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.

ஒரே கடவுளாக இருக்கும் ஆண்டவர் ஏன் விசுவாசிகளைக் காப்பாற்றுவடில்லை?: கிருத்துவர்களின் உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விவகாரங்களில், அவர்கள் என்ன தத்துவம் பேசினாலும், திட்டம் போட்டு வேலைசெய்தாலும், சகோதரத்துவம், மனித உரிமைகள் என்றெல்லாம் பாட்டு பாடினாலும் முடிவில் மதம் மாற்றம் தான் என்று வருகிறது. அதில் அவர்களுக்கு இடைக்காலத்தில் கிடைத்த வெற்றி, இப்பொழுது கிடைப்பதில்லை. அப்பொழுது, மக்களிடையே கிருத்து மிஷினரிகளின் திட்டம், மதமாற்றம் முதலியவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சி இருந்ததில்லை. இன்று ஓரளவு ஊடகங்கள் மக்களை இண்மைப்பதால், விசயங்கள், ஓரளவிற்கு மக்களைச் சென்றடைகின்றன. தொடர்ந்து, நெத சித்தாந்தவாதியோ, மதவாதியோ, அரசியல்வாதியோ மக்களை, நம்பிக்கையாளர்களை, விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. கடவுளை மாற்றுவதால் என்ன பலன், மத்தை மாற்றுவதால் என்ன பலன்? என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். கடவுள் ஒருவரே என்றால், அந்த கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு, ஏன் கிருத்துவர்கள் மற்றும் முகமதியர் ஒருவருக்கொருவர் சண்டை-போர்களில் அடித்துக் கொன்று கொண்டார்கள், பிறகு தத்தம்மக்குள் பிரிவுகளை வைத்துக் கொண்டு அவ்வாறே செய்து வந்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகின்றன. அதாவது ஜெஹோவா கிருத்துவர்களையும் மற்றும் அல்லா முகமதியர்களையும் அமைதியாக என் வாழவைக்கவில்லை,ஏன்பது வினோதமாக உள்ளது. தங்களையே காத்துக் கொள்ள முடியாத இவர்கள், மற்றவர்களை எப்படி காக்கப் போகிறார்கள்? அவரவர் நம்பிக்கையாளர்களைக் காக்காத அல்லா மற்றும் ஜேஹோவா எப்படி மற்றவர்களைக் காக்கப் போகிறார்? என்று ஜென்டல்கள், காபிர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

© வேதபிரகாஷ்

17-05-2015

[1]  புனித சின்னப்பர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அருளிய ஏடுகள், குருத்துவக் கல்லூரி, திருச்சி, 1967, ப.670-671.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

Eucharist and cannibalism

Eucharist and cannibalism

யூகாரிஸ்ட் என்ற பலி சடங்கு: விகிபீடியா கூறுகிறது, “திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும்கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள்”.  ரொட்டியும், சாராயமும் / மதுவும் உண்மையாகவே, இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பதனை நேரிடையாக சொல்வதற்கு அவர்கள் பயப்பட்டனர் என்று தெரிந்தது. யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[1]. அதாவது அவரது உடலை திருப்பலி கொடுத்து, பலிப்பூசை செய்து, உடலின் மாமிசத்தை, ரத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்றாகிறது. உலகத்தில் நடக்கும் எல்லா யுகாரிஸ்டிலும் ஏசுகிறிஸ்து உடல் செல்லமுடியாது. அதிலிருந்தே, இது நடக்கமுடியாத காரியம் என்றாகி விடுகிறது. மேலும் ஏசுகிறிஸ்துவை, ஏதோ ஒரு யோகி, முனிவர், பிரம்மா போன்றெல்லாம் சித்தரிக்கும் போது, அவரது உடலை உண்டு, ரத்தத்தைக் குடிக்கும் சடங்கு காட்டுமிராண்டித்தனமாகப் பட்டது. மனித மாமிசத்தை உண்ணும் “கன்னிபாலிஸம்” என்ற குரூரமானப் பிரிவைக் காட்டுகிறது. பிறகு தினம்-தினம் கிருத்துவர்கள் எப்படி மாமிசத்தை உண்டு, ரத்தத்தை குடித்து வருகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், பைபிளின் படியான உண்மையினை ஏற்றுக் கொள்வதா, அல்லது ஒரு சாத்துவிகமான, சைவ கிறிஸ்துவத்தை அளிப்பதா என்ற குழப்பத்தில் சிக்கிக் கொண்டனர். யோகா, தியானம், முதலியவற்றை செய்யும் யோகிகள், முனிவர்கள் புலாலை உண்பது கிடையாது. திருக்குறள் வேறு கிருத்துவ நூல் என்று சில கிருத்துவ பிரகஸ்பதிகள் புத்தகங்கள் எழுதியுள்ளனர், போதாகுறைக்கு அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான மோசடி ஆய்வுகள் செய்து பி.எச்டிகளும் வாங்கியுள்ளனர்.

Eucharist belief of eating the flesh - Rani John experience

Eucharist belief of eating the flesh – Rani John experience

1998ல் ரொட்டி மற்றும் மது, மாமிசம் மற்றும் ரத்தமாகி விட்டன என்று கேரளாவில் கூறிக்கொண்டது: பிப்ரவரி 1998ல், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிகோடு கிராமத்தில் வாழும் ராணி ஜான் பலும்பரம்பில் [Rani John Palumparambil] என்ற பெண், திருப்பலி பிரசாதத்தை வாயில் வைத்தவுடன், அவை சதை மற்றும் ரத்தமாக மாறிவிட்டது என்று கூறினார்[2].  இதை உள்ளூர் கிருத்துவர்களே நம்பாத நிலையில் உள்ளபோது, சிலர் அதனை பிரபலப்படுத்தினார்கள். வேறுவிதமாக இல்லை என்று இதனை மெய்ப்பிக்கும் வரை, இதெல்லாம் ஆண்டவருடைய மகிமை என்றே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சைரோ-மலங்காரா சர்ச் அதிகாரி கூறினார்[3]. இது உண்மையா-பொய்யா என்று ஆராய்வது ஒருபக்கம் இருந்தாலும், உயிர்ப்பலி சடங்கிற்குப் பிறகு மாமிசம் சாப்பிட்டு, ரத்தம் குடிக்கிறார்கள் என்றால், அவை எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழுகின்றது. ஏதாவது ஒரு விலங்கின் மாமிசம்-ரத்தம் கொண்டு வந்து வைத்து, அவற்றைப் பிரசாதமாகக் கொடுத்தால் பரவாயில்லை, ஆனால், பைபிளில் உள்லது படி அல்லது நம்பிக்கையின் படி, மனித மாமிசம்-ரத்தம் கொடுக்கிறார்கள் என்றால் பிரச்சினை ஆகிறது. அப்படியென்றால் அவை எங்கிருந்து வருகின்றன, பிணத்திலிருந்து வருகின்றனவா அல்லது புதியனவாக இருந்தால், அப்பொழுது இறந்த அல்லது கொல்லப்பட்ட மனிதனின் உடலிலிருந்து வந்தனவா போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை, கிருத்துவர்களே பலமுறை எழுப்பியுள்ளார்கள். நாத்திகர்கள் என்ரு சொல்லிக் கொள்ளும் கூட்டங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

The reported Rani John Eucharist miracle negates  the spiritual -cosmic Christ projected to Indians

The reported Rani John Eucharist miracle negates the spiritual -cosmic Christ projected to Indians

ஜானின் வார்த்தை, மாமிசம், வார்த்தை மாமிசமானது முதலியவை: மனித மாமிசம் உண்ணும் கூட்டதினரால் தான் இத்தகைய சடங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் மாமிசம் உண்ணும் சடங்கினைக் கொண்டிருந்தார்கள் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[4]. ஜானின் விளக்கத்தின்படி[5], “வார்த்தை மாமிசமாகியது” என்பதால், சப்தம் பொருளாக மாறியது, வாஸ்து, வஸ்துவாகியது என்றனர். அதுமட்டுமில்லாது, ஜான் சொல்லுவதாவது[6], “ஏசு அவர்களிடம் சொன்னார். உண்மையாக நான் சொல்கிறேன். மனிதனுடைய மகனின் மாமிசத்தை உண்டு, ரத்தத்தைக் குடித்தால் ஒழிய உனக்கு வாழ்க்கை கிடையாது. யார் என்னுடைய மாமிசத்தைப் புசித்து, ரத்தத்தைக் குடிக்கிறார்களோ, அவர்களுக்கு நிலையான வாழ்வு உள்ளது. நான் அவர்களை கடை நாளன்று எழுப்புவேன். ஆதலால், என்னுடைய சதை மாமிசமாகும், ரத்தம் குடிக்கும் மதுவாகும்”. . யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[7] என்று எடுத்துக் காட்டப்பட்டது.  ரொட்டி மாமிசமாக, ஏசுவின் உடலாக மாறுவதும், மது, ரத்தமாக, கிறிஸ்துவின் ரத்தமாக மாறுவதும் “டிரான்ஸ்-சப்சேன்டியாஷன்” (Transubstantiation) என்றும் விளக்கப்படுகிறது[8]. இவற்றையெல்லாம் மீறித்தான், அதாவது ஜீவகாருண்யம் மிக்க, மாமிசன் தின்னாத, ஒரு சைவ கிறிஸ்துவை இந்துக்களுக்குக் கொடுக்க கிருத்துவர்கள் படாத பாடுபடுகின்றனர். ஆன்மீகப்போர்வையில், பல திரிபுவாதங்களையும் கொடுத்து வருகின்றனர்.

Victor Kulanday book - Paganization of the church in India

Victor Kulanday book – Paganization of the church in India

சிவன்பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்மேரி என்ற கணவன்மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை: கிருத்துவயியலேயே பற்பல முரண்பாடுகள் இருக்கும் இந்நிலையில் தான், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீட்டு கோஷ்டிகள், தக்களது குழப்பத்தைத்தாண்டிய தூஷணத்தையும் சேர்த்துக் கொண்டது. ஓம் என்றால் பெண்ணின் குறியைக் குறிக்கிறது, சிவன் பார்வதியைப் புணர்ந்த போது சதோஷத்தினால் எழுப்பிய சப்தம் தான் ஓம் என்று ஜே. எப். விக்டர் என்ற சாமி குலந்தைசாமி விளக்கம் கொடுத்தார்[9]. ஏசு கிறிஸ்து மேரி மற்றும் அவளது கணவனான ஜோஸப் புணர்ந்து பெற்ற பிள்ளை கிடையாது என்கின்றனர். அதாவது, ஏசு கிறிஸ்து, ஜேஹோவாவின் பரிசுத்த ஆவி, நேரிடையாக மேரியைப் புணர்ந்ததால், கருவுற்று பெற்றெடுத்தாள் என்கிறது பைபிள். மேரி, “நான் எந்த ஆணையும் அறியேன்”, என்பதற்கு, எந்த ஆணுடனும் உடலுறவுக் கொள்ளவில்லை என்று நேரிடையாக மொழிபெயர்க்காமல், அவ்வாறு நாஜுக்காக, மொழிபெயர்த்தனர். நுற்றுக்கணக்கான வெளிவந்துகொண்டிருக்கும் பைபிள்களில் பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன[10]. “நான் கன்னி, நான் எந்த ஆணையும் அறியேன், நான் எந்த ஆணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை, நான் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை…………”, என்று பலவிதமாக மொழிபெயர்த்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளாமல், ஒரு பெண் கருவுற்றிருக்க முடியாது, குழந்தையையும் பெற்றிருக்க முடியாது. அப்படியென்றால், மேரியை யாரோ புணர்ந்தபோது,   சதோஷத்தினால் அவர் எந்த சப்தமத்தை எழுப்பினால் என்பதை திருவாளர் சாமி குலந்தைசாமி சொல்லியிருக்க வேண்டும், ஆனால், சொல்லவில்லை!

Victor Kulanday - a fundamentalist Catholic but posing as Swami

Victor Kulanday – a fundamentalist Catholic but posing as Swami

ஏசுவின் சகோதரர்களும், கிருத்துவ சாமிகளும்: “சிவன்-பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்-மேரி என்ற கணவன்-மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், ஆவி வந்து புணர்ந்தது என்பதனை ஏற்றுகொள்கிறார்கள். பிறகு மதங்களுக்கு இடையிலான உரையாடல் என்று வரும்போது, எப்படி, இந்துமதத்தை மட்டும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இந்துவும், பதிலுக்கு கேட்கலாமே, மேரிக்கு எப்படி குழந்தை பிறந்தது, என்று. இல்லை, குழந்தை பிறந்தது என்றால், யாரோ மேரியைப் புணர்ந்துள்ளான் என்றகிறாது என்றும் வாதிடலாம். இதைத்தவிர, பைபிளிலேயே ஏசுவின் சகோதரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அப்படியென்றால், மேரிக்கு இன்னும் பல பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள் என்றாகிறது. பிறகு அவர்கள் எப்படி பிறந்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், சர்ச்சை இந்துமயமாக்கப்படுகிறது என்று மிக்கக்காட்டமாக, புத்தகத்தை எழுதியுள்ள இவர், தானே காவியணிந்து கொண்டு, நீண்ட முடி வைத்துக் கொண்டு, சாமி குலந்தைசாமி என்று கூறிக் கொண்ட இவரது முரண்பாட்டை என்னென்பது?

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] http://www.newadvent.org/cathen/05573a.htm

[2] http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[3] According to the Syro-Malankara metropolitan, the messages are “in tune” with the Catholic faith. Unless proved otherwise, he said, he has reason to believe that the miracles are genuine and part of God´s design.

http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[4] Bob Arson, Butchering the Human Carcass for Human Consumption, see at:  http://www.churchofeuthanasia.org/e-sermons/butcher.html

[5] And the Word was made flesh, and dwelled among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth (John: 1.14).

[6] Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you. Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. For my flesh is meat indeed, and my blood is drink indeed. (John 6:53-55)

[7] http://www.newadvent.org/cathen/05573a.htm

[8] Transubstantiation (in Latin, transsubstantiatio, in Greek μετουσίωσις metousiosis) is the change whereby, according to the teaching of the Catholic Church, the bread and the wine used in the sacrament of the Eucharist become, not merely as by a sign or a figure, but also in actual reality the body and blood of Christ.

[9] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988, p.72.

[10] http://biblehub.com/luke/1-34.htm