கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (8)!
உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விசயத்தில் வாடிகன் கூறுவது[1]: “இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது”.
எண் | வாடிகன் ஆவணம் கூறுவது | அதன் விமர்சனம் |
1 | இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. | உண்மையானதும் புனிதமானதுமானவற்றை, கத்தோலிக்கம் ஏதோ அறிந்து கொண்டு சான்றிதழ் கொடுக்கும் அகம்பாவ-ஆணவரீதியில் இருந்த நிலை |
2 | தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. | “பலவற்றில் வேறுபடினும்” என்று ஒப்புக் கொண்டு விட்டு, “திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது” என்பது இரட்டைவேடத்தைக் காட்டியது. இந்துமதத்தில் உள்ளவை சிறந்தவை என்றா ஏற்றுகொள்ளவேண்டும், அபகரித்து, கிறிஸ்துவுடையது என்று பொய் பேசக்கூடாது. |
3 | உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். | கிறிஸ்தவத்தில் இல்லாதவை, இந்துமதத்தில் இருக்கும் போது, அவை எப்படி கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது, என்று பொய் பேசலாம்; என்றும் அறிவிக்கவும் வேண்டும், என்று திட்டம் போடலாம்? |
4 | அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். | இது பொய் மீது, பொய்களை வைத்து, வளர்க்கும் அபாண்ட புளுகு மூட்டையாகிறதே? |
5 | எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; | இப்படி பொய் சொல்லிக் கொண்டு, உரையாடல் நடத்தினால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஓடும் நிலைத்தான் ஏற்படும். |
6 | அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். | ஆமாம், பொய்க்கு ஆதரவாக இருந்தால், ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் போலும். |
7 | இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது | இதுவரை, கிறிஸ்தவல், இந்தியாவில் அழித்தவை தான் அதிகம், இன்றும் அழித்து வருகின்றது. அந்நிலையில் இத்தகைய அபாண்டமான பொய்களை கூறவேண்டிய அவசியம் என்ன? |
இந்து மதமும், இந்து–மதம் அல்லாத பிற மதங்களும்: கிருத்துவத்திற்கு மூலத்துவம் (Originality), முதலத்துவம் (Primitivity), தனித்தன்மை (Independent unique position) இல்லாததினால், ஒரு தாழ்வு மனப்பாங்கோடு, மற்ற மதங்களின் மீது தீவிரமான தாக்குதல், ஆக்கிரமிப்பு, அபகரிப்பு போன்ற செயல்களில் அதிகமகவே ஈடுபட்டு வந்துள்ளது. கிருத்துவமதம், இடைக்காலத்தில் தான் ஓரளவிற்கு சித்தாந்தங்களை எல்லாம் கூட்டி, சேர்த்து, கழித்து, ஒருவழியாக மதமாக உருவாக்கம் அடைந்தது. முகமதியம் வன்முறை மூலம் பிரபலமடைந்த நிலையைக் கண்டு, தானும் அதே வழியில் இறங்கியது. இரண்டு மதங்களும் சண்டையிட்டுக் கொண்டன. போர், வன்முறை கொலைகள், முதலியவற்றால் அமைதி, சாந்தம், நிம்மதி, ஆன்மீகம், அருள், முதலியவை வரவில்லை. மதநம்பிக்கையில் என்றுமே எதேச்சாதிகாரம், காலனிய அடக்குமுறைகள், முதலாளித்துவம், சர்வாதிகாரம், முதலிய கொள்கைகளுடன் செயல்பட முடியாது. ஆனால், சண்டை-சச்சரவு இல்லாமல், இன்னொரு மதம் எல்லா உலகத்தில் இடங்களிளும் பரவியிருந்தது கண்டு திகைத்து விட்டனர். ஆக பொருட்கள், சேவைகள் மட்டுமல்ல, மற்ற மதம் பற்றிய விசயங்களும் அங்கிருந்துதான் வருகின்றன என்று அறிந்து கொண்டனர். அதுதான் இந்துமதம் என்றறிந்த போது, அதன் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஜைனம், பௌத்தம் மற்றும் சீக்கியம், இந்துமதத்திலிருந்து தோன்றியதால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிக போன்ற காரணிகளால் வேறுபடவில்லை. ஆனால், அடக்குமுறைகளினால் உள்ளே வந்த முகமதியம் மற்றும் கிருத்துவம் மக்களிடையே செல்வாக்குப் பெறமுடியவில்லை.
இல்லாதவர்கள் தாம்,வைருப்பவர்களிடம் கையேந்த வேண்டும்: கிருத்துவமதமே ஒரு மதம் இல்லை, ஏனெனில், அது பற்பல மத நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், நாகரிகங்களை எல்லாவற்றையும், அபகரித்துக் கொண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம்-கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு, சேர்த்து வளர்ந்த மதம் ஆதலால், மூலத்துவம், முதலத்துவம், தனித்துவம் முதலியவற்றை அதில் எதிர்பார்க்க முடியாது. எனவே பலவற்றிலிருந்து பெற்ற ஒன்று பலவாகவே பிரிந்து போவதில் வியப்பிலை. அதனால் தான், கிருத்துவத்தில் இன்று பல்லாயிரக்கணக்கில் மதப்பிரிவுகள் (denominations), இறையியல் கோஷ்டிகள் (Theological divisions) மற்றும் வகுப்புவாதக் குழுக்கள் (Sectarian groups) இருகின்றன. அதாவது, இல்லாமல் கடன் / தானம் வாங்கி ஆரம்பித்தது அவ்வாறே பிரிந்து விட்டது. இல்லாதவர்கள் தாம், இருப்பவர்களிடம் கையேந்த வேண்டும். எப்பொழுது, உரையாடல் என்று இறங்கி விட்டார்களோ, அப்பொழுதே, அவர்களிடம் சரக்கு, சிறப்பான விசயம், முதலியவை இல்லை என்று தெரிகிறது. எனவே, பிச்சையெடுப்பவர், கையேந்திக் கொண்டு, பவ்யமாகத்தான், வந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், அதிகாரத் தோரணையில் செயல்பட முடியாது. கிருத்துவ மதம் சரித்திர ரீதியிலாக புதிய மதம் என்றதால், ஆரம்பத்திலிருந்தே, ஏற்கெபனவே இருந்த மதங்களிலிருந்து உள்ளவற்றை அபகரித்து, தனதாக்கிக் கொண்டு, பல உருவங்களில் உருவெடுத்து, 13-14ம் நாற்றாண்டுகளில் ஒரு நிலையை அடந்தது.
இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம்: உலகத்திலேயே, இந்து மதத்திற்கு மட்டும் தான், எல்லாமே ஒரே இடத்தில் இருக்கின்றன. அதாவது, அந்த இடத்தில் தோன்றியதால், அந்த பாரம்பரியம், கலாச்சாரம் முதலிய காரணிகளுடன் சேர்ந்து வளர்ந்து, வாழ்ந்து, தொடர்ந்திருப்பதால், எல்லாமே அங்கேயே அடங்கிவிடுகின்றன. தத்துவம், இறையியல், ஆன்மீகம், தர்க்கம் மற்றும் கலை, விஞ்ஞான, தொழிற்நுட்பங்களும் அந்நம்பிக்கையாளர்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பல்லாயியக் கணக்கான வருட மாறுதல்கள் இருந்தாலும், இன்றும் அவர்கள், ஒரு பகுதியிலிருந்து, இன்னொருப் பகுதிக்குச் சென்றால், அங்குள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. என்னத்தான், மேலே புதியபூச்சு பூசப்பட்டிருந்தாலும், உள்ளே இருக்கும் இந்தியத்துவம் வெளிப்படுகிறது. எப்படி பலதரப்பட்ட இந்திய நாட்டியமுறைகளில், வெவ்வேறு சங்கீத பாரம்பரியங்களில், பேசும் பலமொழிகளில் ஒற்றுமைக் காணப்படுகிறாதோ, அடிப்படையிலான ஒற்றுமையுள்ளதோ, அதே போல உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றில் அத்தகைய ஒற்றுமைகள் உள்ளதை மக்கள் சொல்லாமலேயே அறிந்து கொள்கிறார்கள் அதுதான், இந்தியநாட்டின் சிறந்தத்தன்மை. ஆனால், இப்பொழுது இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம் என்று பேசி குழப்பப் பார்கிறார்கள். நாட்டியம் மற்றும் தேசியம் என்று பேசி பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.
ஒரே கடவுளாக இருக்கும் ஆண்டவர் ஏன் விசுவாசிகளைக் காப்பாற்றுவடில்லை?: கிருத்துவர்களின் உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விவகாரங்களில், அவர்கள் என்ன தத்துவம் பேசினாலும், திட்டம் போட்டு வேலைசெய்தாலும், சகோதரத்துவம், மனித உரிமைகள் என்றெல்லாம் பாட்டு பாடினாலும் முடிவில் மதம் மாற்றம் தான் என்று வருகிறது. அதில் அவர்களுக்கு இடைக்காலத்தில் கிடைத்த வெற்றி, இப்பொழுது கிடைப்பதில்லை. அப்பொழுது, மக்களிடையே கிருத்து மிஷினரிகளின் திட்டம், மதமாற்றம் முதலியவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சி இருந்ததில்லை. இன்று ஓரளவு ஊடகங்கள் மக்களை இண்மைப்பதால், விசயங்கள், ஓரளவிற்கு மக்களைச் சென்றடைகின்றன. தொடர்ந்து, நெத சித்தாந்தவாதியோ, மதவாதியோ, அரசியல்வாதியோ மக்களை, நம்பிக்கையாளர்களை, விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. கடவுளை மாற்றுவதால் என்ன பலன், மத்தை மாற்றுவதால் என்ன பலன்? என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். கடவுள் ஒருவரே என்றால், அந்த கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு, ஏன் கிருத்துவர்கள் மற்றும் முகமதியர் ஒருவருக்கொருவர் சண்டை-போர்களில் அடித்துக் கொன்று கொண்டார்கள், பிறகு தத்தம்மக்குள் பிரிவுகளை வைத்துக் கொண்டு அவ்வாறே செய்து வந்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகின்றன. அதாவது ஜெஹோவா கிருத்துவர்களையும் மற்றும் அல்லா முகமதியர்களையும் அமைதியாக என் வாழவைக்கவில்லை,ஏன்பது வினோதமாக உள்ளது. தங்களையே காத்துக் கொள்ள முடியாத இவர்கள், மற்றவர்களை எப்படி காக்கப் போகிறார்கள்? அவரவர் நம்பிக்கையாளர்களைக் காக்காத அல்லா மற்றும் ஜேஹோவா எப்படி மற்றவர்களைக் காக்கப் போகிறார்? என்று ஜென்டல்கள், காபிர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
© வேதபிரகாஷ்
17-05-2015
[1] புனித சின்னப்பர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அருளிய ஏடுகள், குருத்துவக் கல்லூரி, திருச்சி, 1967, ப.670-671.