கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]
தாமஸ் கட்டுக் கதையுடன் இணைப்பது: சி.பி.ஆர்.பவுண்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில், நந்திதா கிருஷ்ணா, டி.கே.வி.ராஜனை புகழ்ந்து பேசினார்[1]. அவர் நடத்திய கண்காட்சியைக் குறிப்பிட்டு[2], “பிருந்தாவனத்தில் பிரேம சரோவர் என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ண–ராதாராணி படங்களும், ஏசுகிறிஸ்துவின் சித்திரங்களும் வைக்கப் பட்டு, இணைக்கப் படுகின்றன…..மேனாட்டவர் கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து ஒப்பீடு செய்து, கிருஷ்ணருடைய போதனைகள் தாமஸிடமிருந்து பெறப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், இலக்கிய மற்றும் அகழ்வாய்வு ஆதாராங்கள் அவ்வாறில்லை என்று உறுதி செய்தது.” தாமஸ் கட்டுக் கதையை இணைப்பது வேறு, இந்தியாவில் கிறிஸ்து என்ற கட்டுக் கதை வேறு, ஆனால், இரண்டையும் வைத்துக் குழப்புவதைப் போன்றுள்ளது. இங்கு தாமஸை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை.
கிறிஸ்து–கிருஷ்ணா கண்காட்சி, கிருத்துவ–இந்து உரையாடலுக்கு வெள்ளோட்டமா?: லயோலா காலேஜில், ஃபாதர் ஜேம்ஸிடம் ஆதரவுடன், அன்புடன், “பைபிள் ஆராய்ச்சியைப்” பயின்றேன் என்று சொல்லிக் கொள்கிறார்! கிருஷ்ண பக்தராக இருக்கும் இவருக்கு, அவ்வாறு, பாதரிடம், பைபிள் பாடங்கள் கற்றுக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. இவராக கிருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொண்டாரா அல்லது அவர்கள் இவருக்கு வலை வீசினார்களா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். “கிறிஸ்து-கிருஷ்ணா,” கண்காட்சி போது -, Dr R. சேதுராமன் – Meenakshi Foundation founder etc, ஆர்காடு நவாப் -Nawab Mohammed Abdul Ali, Fr போனிஃபேஸ் ஜெயராஜ் SJ முதலியோரை வரவழைத்து, டி.கே.வி.ராஜன் விழா நடத்தினார். அப்பொழுது, லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ், “இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது,” என்று பிரகடனம் செய்தார். அக்டோபர் 23, 2016 அன்று விவேகானந்தர் அரங்க, வேதாந்த மையம், டெக்சாஸில் “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” என்று மதங்களுக்குள் இடையே உரையாடல் என்ற ரீதியில் பேசினார். ஆக, இங்கு, இவரது, கிருத்துவத் தொடர்புகளின் பின்னணி முழுமையாக வெளிப்பட்டது. அத்தகைய உரையாடலில் பங்குக் கொள்ளத்தான், சென்னையில், “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” கண்காட்சி நடத்தப் பட்டது. நவம்பர் 17, 2018 அன்று டெல்லாஸ், அமெரிக்காவில் உள்ள ராதா-கிருஷ்ண கோவிலில், “ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் மஹாபாரதம்” பற்றி சொற்பொழிவாற்றுகிறார்.
ஜான் பி. ஜோன்ஸ் போன்று ராஜன் தயாரிக்கப் பட்டாரா?: “கிருஷ்ணா-கிறிஸ்து” ஒப்பீடு, சி.எப்.சி.வோல்னி[3] கிறிஸ்து என்ற தத்துவம், கிருஷ்ண என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியவுடன், அதனை எதிர்க்க, இத்தகைய வேலைகள் ஆரம்பித்தன. இவை மூன்று நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இதை கே.வி.ராமகிருஷ்ண ராவ்[4] என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஐரோப்பியக் கிருத்துவர்கள் இந்திய புராணங்களில் தான் கடல்கோள்கள், பூமி மூழ்கியது, மறுபடியும் படைப்பு மூலம் உயிரினங்கள் தோன்றியது பற்றிய விவரங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன என்பதை கண்டறிந்தனர். அதில் இருக்கும் காக்கும் கடவுளை – நாராயணனை அவர்கள், கிரிஸ்ட்ன, கிருஸ்ன, கிருஷ்ண, …..என்றெல்லாம் எழுதினார்கள்[5]. முன்னர் சி.எப்.சி.வோல்னி முதல் ஜெ.எம்.ராபர்ட்சன்[6] வரை கிறிஸ்து தத்துவம் கிருஷ்ண என்பதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால், காலனிய ஆதிக்கக் காலத்தில், தம்முடைய ஏசுகிறிஸ்து உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள “கிறிஸ்துவா-கிருஷ்ணரா” என்று ஒப்பீட்டு கதைகளைப் புனைய ஆரம்பித்தனர். ஜான் பி. ஜோன்ஸ்[7] என்பவன், அத்தகைய தாக்குதலை ஆரம்பித்து, அன்டோவர், ஹேல், ஹார்வார்ட், வெஸ்டர்ன் ரிசர்வ் மற்ற பல்கலைக்கழகங்களின் செமினரிகளில் உரையாற்றினான். பிறகு 1902ல் “இந்துக்களுக்குப் பிரச்சினை கிருஷ்ணரா, கிறிஸ்துவா?” என்ற புத்தகத்தையும் வெளியிட்டான். இந்த ராஜன் விசயத்திலும், முன்னர் கிருஷ்ணரைப் போற்றி ஆரம்பித்து, பிறகு “கிறிஸ்து-கிருஷ்ணர்” என்று ஒப்பிட்டு கண்காட்சிகள் நடத்தி, இறகு முடிவாக, மதங்களுக்கு இடையில் உரையாடல் என்று முடித்துள்ளார்.
ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி முதலியவை: டி.கே.சி. ராஜனின் இந்த வீடியோ பேச்சு, “மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்” திகைப்பாக இருக்கிறது[8]. துவாரகா, கிருஷ்ணா, மஹாபாரதம் என்ற்ய் ஆரம்பித்து, “……..தேர்களையும் குதிரைகளையும் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்…. அதற்கு முன்பாக இருந்தவர்களுக்கு குதிரைகளை ஓட்டத் தெரியாது..குதிரைகளே அக்காலத்தில் இல்லை..சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது….என்று ஐராவதம் மகாதேவன்…..ஆஸ்கோ பார்போலோ….அதற்கான strong evidences இருக்கு… archaeological-ஆ இருக்கு…..இல்லை அது வந்து வடமொழி சம்பந்தமா ……Sanskrit oriented அல்லது Aryan orented என்று எஸ்.ஆர்.ராவ் ….சொல்கிறார்கள்…. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது திராவிடர்களுடையதாகத்தான் தெரிகிறது….3000 சீல்ஸ் இருக்குங்க.. இப்போ எல்லாமே internetல் available. அந்த ஒவ்வொரு சீலிலும் pictogram இருக்கும்.அத கண்டுபிடிச்சா….அந்த pictographல் என்ன இருக்கு என்று தான் இப்பொழுது task……ஆகவே, இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர வேண்டும்..தொடரப் போகிறது… தமிழனின் தொன்மையும், நாகரிகமும் எங்கும் பறைச் சாற்றும் கீழடி போல இந்த சினோலி extend excavation செய்ய வேண்டும்…,” என்று முடிப்பது வேடிக்கையாக இருக்கிறது[9]. இன்றைய நிலையில், சரித்திராசிரியர்கள் யாரும் ஆரிய-திராவிட இனவாதங்களைக் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட்டனர். ஆனால், இவர் அதை இன்னும் பிடித்துக் கொண்டு “ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி,” என்று பேசியுள்ளது, பல கேள்விகளை எழுப்புகின்றன.
முடிவுரை– இந்துக்களுக்கு எச்சரிக்கை: இந்தியா செக்யூலரிஸ நாடானதால், யார் வேண்டுமானாலும், எந்த மதத்தையும் தழுவலாம், ஆனால், எல்லா மதங்களுக்கும், மத-நம்பிக்கையாளர்களுக்கும் சம-உரிமைகள் இருக்கின்றன. எனவே, யாரும் என் மதம் தான் உயர்ந்தது, எங்கள் மதப்புத்தகம் தான் சிறந்தது, எங்கள் கடவுள்-பெண் தெய்வம் தான் உண்மையான கடவுள்-தெய்வம், மற்றவை எல்லாம் போலி, எங்களுடைய மதங்களிலிருந்து தான் உருவானது என்றெல்லாம், புனைந்து பேச-எழுத உரிமையில்லை. ஆனால், நாத்திகர்கள்-இந்துவிரோதிகள் ஒரு பக்கம் கடவுள்-தெய்வம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரும் அதே நேரத்தில், கிருத்துவகளும், முகமதியரும், மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களை, இந்துமதத்தைத் தாக்குவது, தூஷிப்பது, ஊடகங்களிலேயே வெளிப்படையாக, இத்தகைய கருத்துகளை சொல்வது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் செய்து வருகின்றனர்.
1. கிருஷ்ணரைப் பற்றி அல்லது ராமரைப் பற்றி யார்வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம், உரிமைகள் இருக்கின்றன என்று நம்பலாம்!
2. எஸ்.ஆர்.ராவ் (1922-2013) முதன் முதலில் 1980களில் கடலடி அகழ்வாழ்வு மூலம், கடல் கொண்ட துவாரகையைக் கண்டு பிடித்தார்.
3. மஹாபாரத யுத்தத்தில் அணு ஆயுதம் போன்றவை உபயோகப் படுத்தி இருக்கலாம் என்று முதலில் எடுத்துக் காட்டியது பி.என்.ஓக் (1917-2007).
4. எனவே, அந்நிலையில், இப்பொழுது ஆராய்ச்சி செய்தால், இவர்களது ஆராய்ச்சிகளைக் குறிப்பிடாமல் செய்ய முடியாது.
5. அதனால், கிருஷ்ணரைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று ஏற்கெனவே உள்ளதை எல்லாம் குறிப்பிட்டு, ஏதோ புதியதாகக் கண்டு பிடித்தது போல சொல்லிக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!
6. கிருஷ்ணர் என்ற சாக்கில், கிறிஸ்துவையும் சேர்ப்பது, இருவர்களுக்கும் அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன என்று போதிப்பது சரியில்லை.
7. டி.கே.வி.ராஜன் என்பவர் 1990களில் கிருஷ்ண ஜயந்தி சமயத்தில், தனது வீட்டில் கண்காட்சி என்று வைத்து விளம்பரம் கொடுப்பது வழக்கம்!
8. ஆனால், இப்பொழுது “கிறுஸ்துவும், கிருஷ்ணாவும்” என்றெல்லாம் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்து இருப்பது அவர் கிருத்துவர்களில் திட்டத்திற்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது!
9. போதாகுறைக்கு, ஜேம்ஸ் பாதிரியிடன் பயிற்சி பெற்றேன், ஜெயராஜிடம் பாராட்டுப் பெற்றேன், “பைபிள் அகழ்வாய்வு”லிருந்து, அறியப் படவேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பேசி வருவது திகைப்பாக இருக்கிறது.
10. கிருஷ்ணரின் பெயரால், இத்தகைய சொற்பொழிவுகள், யூ-டியூப், செய்தி விளம்பரங்கள் என்று பிரச்சாரம் நடப்பது உள்-நோக்கம் கொண்டவை என்று தெரிகிறது
© வேதபிரகாஷ்
22-06-2020
[1] Dr. Nanditha Krishna of the C.P.R Foundation was all praise for this when it was exhibited at Chennai some years ago. The exhibition also includes a number of images of sites connected with Lord Jesus Christ alongside pictures of places like the Prema Sarovara in Vrindavan where Lord Krishna met Radharani. Nanditha Krishna was commenting upon the work of Rajan.
Vedakrishna.com, Krishna Archeology, Nanditha Krishna, nankrishna@vsnl.com;
[2] Western scholars tried to establish a connection between Krishna and Christ, claiming that the former was derived from St Thomas’ teachings about the latter, but literature and archaeology have proved otherwise. http://veda.krishna.com/encyclopedia/krishna-archeology.htm
[3]C. F. C. Volney, , The Ruins, or Meditation on the Revolutions of Empires and the Law of Nature, Truth Seeker Co., New York, 1890.
[4] K.V.Ramakrisha Rao, A Critical analysis of “Christian-Vaishnavite Comparative Studies” in the context of “Inter-faith / religious dialogue” and “Inculturation”, it was supposed to appear in a book proposed by Sandhya Jain and others. For some reasons, it is yet to see the light.
[5] Christna, Chrishna, Cristna, Crishna are the words and expressions found recorded in the literature denoting to “Krishna”, the Hindu protecting and Saviour God. “In India, the Christian mind was terribly upset by the Puranic narratives of Flood, the Fish God saviour of the humanity, Narayana – the protecting and Saviour God, Christna, Chrishna or Krishna[5] and other related concepts”.
[6]J. M. Robertson, Hindu Mythology and Christianity, Swati Publications, New Delhi, 1989.
[7] John P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.
[8] TKV Rajan, மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர், Indian Space Monitor