Archive for the ‘கத்தோலிக்கர்’ Category

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

June 25, 2020

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

TKV Rajan book on Kashmir released

தாமஸ் கட்டுக் கதையுடன் இணைப்பது: சி.பி.ஆர்.பவுண்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில், நந்திதா கிருஷ்ணா, டி.கே.வி.ராஜனை புகழ்ந்து பேசினார்[1]. அவர் நடத்திய கண்காட்சியைக் குறிப்பிட்டு[2], “பிருந்தாவனத்தில் பிரேம சரோவர் என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணராதாராணி படங்களும், ஏசுகிறிஸ்துவின் சித்திரங்களும் வைக்கப் பட்டு, இணைக்கப் படுகின்றன…..மேனாட்டவர் கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து ஒப்பீடு செய்து, கிருஷ்ணருடைய போதனைகள் தாமஸிடமிருந்து பெறப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், இலக்கிய மற்றும் அகழ்வாய்வு ஆதாராங்கள் அவ்வாறில்லை என்று உறுதி செய்தது.” தாமஸ் கட்டுக் கதையை இணைப்பது வேறு, இந்தியாவில் கிறிஸ்து என்ற கட்டுக் கதை வேறு, ஆனால், இரண்டையும் வைத்துக் குழப்புவதைப் போன்றுள்ளது. இங்கு தாமஸை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை.

TKV Rajan Christ-Krishna DinaMani 20-09-2012

கிறிஸ்துகிருஷ்ணா கண்காட்சி, கிருத்துவஇந்து உரையாடலுக்கு வெள்ளோட்டமா?: லயோலா காலேஜில், ஃபாதர் ஜேம்ஸிடம் ஆதரவுடன், அன்புடன், “பைபிள் ஆராய்ச்சியைப்” பயின்றேன் என்று சொல்லிக் கொள்கிறார்! கிருஷ்ண பக்தராக இருக்கும் இவருக்கு, அவ்வாறு, பாதரிடம், பைபிள் பாடங்கள் கற்றுக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. இவராக கிருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொண்டாரா அல்லது அவர்கள் இவருக்கு வலை வீசினார்களா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். “கிறிஸ்து-கிருஷ்ணா,” கண்காட்சி போது -, Dr R. சேதுராமன் – Meenakshi Foundation founder etc, ஆர்காடு நவாப் -Nawab Mohammed Abdul Ali, Fr போனிஃபேஸ் ஜெயராஜ் SJ முதலியோரை வரவழைத்து, டி.கே.வி.ராஜன் விழா நடத்தினார். அப்பொழுது, லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ், “இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது,” என்று பிரகடனம் செய்தார். அக்டோபர் 23, 2016 அன்று விவேகானந்தர் அரங்க, வேதாந்த மையம், டெக்சாஸில் “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” என்று மதங்களுக்குள் இடையே உரையாடல் என்ற ரீதியில் பேசினார். ஆக, இங்கு, இவரது, கிருத்துவத் தொடர்புகளின் பின்னணி முழுமையாக வெளிப்பட்டது. அத்தகைய உரையாடலில் பங்குக் கொள்ளத்தான், சென்னையில், “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” கண்காட்சி நடத்தப் பட்டது. நவம்பர் 17, 2018 அன்று டெல்லாஸ், அமெரிக்காவில் உள்ள ராதா-கிருஷ்ண கோவிலில், “ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் மஹாபாரதம்” பற்றி சொற்பொழிவாற்றுகிறார்.

TKV rajan - Christ or Krishna, inter-faith presentation!

ஜான் பி. ஜோன்ஸ் போன்று ராஜன் தயாரிக்கப் பட்டாரா?: “கிருஷ்ணா-கிறிஸ்து” ஒப்பீடு, சி.எப்.சி.வோல்னி[3] கிறிஸ்து என்ற தத்துவம், கிருஷ்ண என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியவுடன், அதனை எதிர்க்க, இத்தகைய வேலைகள் ஆரம்பித்தன. இவை மூன்று நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இதை கே.வி.ராமகிருஷ்ண ராவ்[4] என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஐரோப்பியக் கிருத்துவர்கள் இந்திய புராணங்களில் தான் கடல்கோள்கள், பூமி மூழ்கியது, மறுபடியும் படைப்பு மூலம் உயிரினங்கள் தோன்றியது பற்றிய விவரங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன என்பதை கண்டறிந்தனர். அதில் இருக்கும் காக்கும் கடவுளை – நாராயணனை அவர்கள், கிரிஸ்ட்ன, கிருஸ்ன, கிருஷ்ண, …..என்றெல்லாம் எழுதினார்கள்[5]. முன்னர் சி.எப்.சி.வோல்னி முதல் ஜெ.எம்.ராபர்ட்சன்[6] வரை கிறிஸ்து தத்துவம் கிருஷ்ண என்பதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால், காலனிய ஆதிக்கக் காலத்தில், தம்முடைய ஏசுகிறிஸ்து உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள “கிறிஸ்துவா-கிருஷ்ணரா” என்று ஒப்பீட்டு கதைகளைப் புனைய ஆரம்பித்தனர். ஜான் பி. ஜோன்ஸ்[7] என்பவன், அத்தகைய தாக்குதலை ஆரம்பித்து, அன்டோவர், ஹேல், ஹார்வார்ட், வெஸ்டர்ன் ரிசர்வ் மற்ற பல்கலைக்கழகங்களின் செமினரிகளில் உரையாற்றினான். பிறகு 1902ல் “இந்துக்களுக்குப் பிரச்சினை கிருஷ்ணரா, கிறிஸ்துவா?” என்ற புத்தகத்தையும் வெளியிட்டான். இந்த ராஜன் விசயத்திலும், முன்னர் கிருஷ்ணரைப் போற்றி ஆரம்பித்து, பிறகு “கிறிஸ்து-கிருஷ்ணர்” என்று ஒப்பிட்டு கண்காட்சிகள் நடத்தி, இறகு முடிவாக, மதங்களுக்கு இடையில் உரையாடல் என்று முடித்துள்ளார்.

TKV Rajan batting for Jesus Christ.USA meeting

ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி முதலியவை: டி.கே.சி. ராஜனின் இந்த வீடியோ பேச்சு, “மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்” திகைப்பாக இருக்கிறது[8]. துவாரகா, கிருஷ்ணா, மஹாபாரதம் என்ற்ய் ஆரம்பித்து, “……..தேர்களையும் குதிரைகளையும் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்…. அதற்கு முன்பாக இருந்தவர்களுக்கு குதிரைகளை ஓட்டத் தெரியாது..குதிரைகளே அக்காலத்தில் இல்லை..சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது….என்று ஐராவதம் மகாதேவன்…..ஆஸ்கோ பார்போலோ….அதற்கான strong evidences இருக்கு… archaeological- இருக்கு…..இல்லை அது வந்து வடமொழி சம்பந்தமா ……Sanskrit oriented அல்லது Aryan orented என்று எஸ்.ஆர்.ராவ் ….சொல்கிறார்கள்…. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது திராவிடர்களுடையதாகத்தான் தெரிகிறது….3000 சீல்ஸ் இருக்குங்க.. இப்போ எல்லாமே internetல் available. அந்த ஒவ்வொரு சீலிலும்  pictogram இருக்கும்.அத கண்டுபிடிச்சா….அந்த pictographல் என்ன இருக்கு என்று தான் இப்பொழுது  task……ஆகவே, இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர வேண்டும்..தொடரப் போகிறதுதமிழனின் தொன்மையும், நாகரிகமும் எங்கும் பறைச் சாற்றும் கீழடி போல இந்த சினோலி extend excavation  செய்ய வேண்டும்…,” என்று முடிப்பது வேடிக்கையாக இருக்கிறது[9]. இன்றைய நிலையில், சரித்திராசிரியர்கள் யாரும் ஆரிய-திராவிட இனவாதங்களைக் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட்டனர். ஆனால், இவர் அதை இன்னும் பிடித்துக் கொண்டு “ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி,” என்று பேசியுள்ளது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

TKV Rajan, project

முடிவுரைஇந்துக்களுக்கு எச்சரிக்கை: இந்தியா செக்யூலரிஸ நாடானதால், யார் வேண்டுமானாலும், எந்த மதத்தையும் தழுவலாம், ஆனால், எல்லா மதங்களுக்கும், மத-நம்பிக்கையாளர்களுக்கும் சம-உரிமைகள் இருக்கின்றன. எனவே, யாரும் என் மதம் தான் உயர்ந்தது, எங்கள் மதப்புத்தகம் தான் சிறந்தது, எங்கள் கடவுள்-பெண் தெய்வம் தான் உண்மையான கடவுள்-தெய்வம், மற்றவை எல்லாம் போலி, எங்களுடைய மதங்களிலிருந்து தான் உருவானது என்றெல்லாம், புனைந்து பேச-எழுத உரிமையில்லை. ஆனால், நாத்திகர்கள்-இந்துவிரோதிகள் ஒரு பக்கம் கடவுள்-தெய்வம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரும் அதே நேரத்தில், கிருத்துவகளும், முகமதியரும், மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களை, இந்துமதத்தைத் தாக்குவது, தூஷிப்பது, ஊடகங்களிலேயே வெளிப்படையாக, இத்தகைய கருத்துகளை சொல்வது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் செய்து வருகின்றனர்.

Christ and Krishna - books produced

1.       கிருஷ்ணரைப் பற்றி அல்லது ராமரைப் பற்றி யார்வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம், உரிமைகள் இருக்கின்றன என்று நம்பலாம்!

 

2.       எஸ்.ஆர்.ராவ் (1922-2013) முதன் முதலில் 1980களில் கடலடி அகழ்வாழ்வு மூலம், கடல் கொண்ட துவாரகையைக் கண்டு பிடித்தார்.

 

3.       மஹாபாரத யுத்தத்தில் அணு ஆயுதம் போன்றவை உபயோகப் படுத்தி இருக்கலாம் என்று முதலில் எடுத்துக் காட்டியது பி.என்.ஓக் (1917-2007).

 

4.       எனவே, அந்நிலையில், இப்பொழுது ஆராய்ச்சி செய்தால், இவர்களது ஆராய்ச்சிகளைக் குறிப்பிடாமல் செய்ய முடியாது.

 

5.       அதனால், கிருஷ்ணரைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று ஏற்கெனவே உள்ளதை எல்லாம் குறிப்பிட்டு, ஏதோ புதியதாகக் கண்டு பிடித்தது போல சொல்லிக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!

 

6.       கிருஷ்ணர் என்ற சாக்கில், கிறிஸ்துவையும் சேர்ப்பது, இருவர்களுக்கும் அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன என்று போதிப்பது சரியில்லை.

 

7.       டி.கே.வி.ராஜன் என்பவர் 1990களில் கிருஷ்ண ஜயந்தி சமயத்தில், தனது வீட்டில் கண்காட்சி என்று வைத்து விளம்பரம் கொடுப்பது வழக்கம்!

 

8.      ஆனால், இப்பொழுது “கிறுஸ்துவும், கிருஷ்ணாவும்” என்றெல்லாம் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்து இருப்பது அவர் கிருத்துவர்களில் திட்டத்திற்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது!

9.       போதாகுறைக்கு, ஜேம்ஸ் பாதிரியிடன் பயிற்சி பெற்றேன், ஜெயராஜிடம் பாராட்டுப் பெற்றேன், “பைபிள் அகழ்வாய்வு”லிருந்து, அறியப் படவேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பேசி வருவது திகைப்பாக இருக்கிறது.

 

10.   கிருஷ்ணரின் பெயரால், இத்தகைய சொற்பொழிவுகள், யூ-டியூப், செய்தி விளம்பரங்கள் என்று பிரச்சாரம் நடப்பது உள்-நோக்கம் கொண்டவை என்று தெரிகிறது

 

© வேதபிரகாஷ்

22-06-2020

Christ, Jesus, myth

[1] Dr. Nanditha Krishna of the C.P.R Foundation was all praise for this when it was exhibited at Chennai some years ago. The exhibition also includes a number of images of sites connected with Lord Jesus Christ alongside pictures of places like the Prema Sarovara in Vrindavan where Lord Krishna met Radharani. Nanditha Krishna was commenting upon the work of Rajan.

Vedakrishna.com, Krishna Archeology, Nanditha Krishna, nankrishna@vsnl.com;

[2] Western scholars tried to establish a connection between Krishna and Christ, claiming that the former was derived from St Thomas’ teachings about the latter, but literature and archaeology have proved otherwise.  http://veda.krishna.com/encyclopedia/krishna-archeology.htm

[3]C. F. C. Volney, , The Ruins, or Meditation on the Revolutions of Empires and the Law of Nature, Truth Seeker Co., New York, 1890.

[4] K.V.Ramakrisha Rao, A Critical analysis of “Christian-Vaishnavite Comparative Studies” in the context of “Inter-faith / religious dialogue” and “Inculturation”, it was supposed to appear in a book proposed by Sandhya Jain and others. For some reasons, it is yet to see the light.

[5] Christna, Chrishna, Cristna, Crishna are the words and expressions found recorded in the literature denoting to “Krishna”, the Hindu protecting and Saviour God. “In India, the Christian mind was terribly upset by the Puranic narratives of Flood, the Fish God saviour of the humanity, Narayana – the protecting and Saviour God, Christna, Chrishna or Krishna[5] and other related concepts”.

[6]J. M. Robertson, Hindu Mythology and Christianity, Swati Publications, New Delhi, 1989.

[7] John  P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.

[8] TKV Rajan, மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர், Indian Space Monitor

[9] https://www.youtube.com/watch?v=PQmP36ydCy8

Christ and Krishna - Rosen, 2011

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி! [1]

June 25, 2020

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி! [1]

Tamil Hindu- promoting TKV Rajan-1

முன்னுரைஇந்தியாவில் கிறிஸ்து மற்றும் தாமஸ் கட்டுக் கதைகளை பரப்ப வைஷ்ணவ ஆராய்ச்சி ஆரம்பித்தது: 1980களுக்குப் பிறகு, இங்கிலீஷில் படித்த மெத்தப் பெரிய-உயரடுக்கு-மிடுக்கு இந்தியர்கள் மற்றும் இந்துக்கள், அறிந்தோ-அறியாமலோ, “கிருஷ்ணர்-கிறிஸ்து” என்று ஒப்பீடு செய்ய ஆரம்பித்தனர். அவர்களுடைய வைஷ்ணவ நோக்கில் ஒருபக்கம் பக்திமான்களான இந்துக்களை உசுப்பி விடுவது மற்றும் இன்னொரு பக்கம் கிறிஸ்து தான் கிருஷ்ணர் என்றும், தங்களுடைய மதங்களுக்குள் இடையே உள்ள உரையாடல் என்ற திட்டத்தின் கீழ் இருவிதமாக பேசி வந்தனர். பிரான்சிஸ் சேவியர் குளூனி போன்ற ஹார்வார்ட் பேராசிரியர் வந்து வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று வந்தபோது, இங்கிருக்கும் வைஷ்ணவ பேராசிரியர்கள், விற்பனர்கள் மற்றும் பெரியவர்கள் – எம்.ஏ.அனந்தகிருஷ்ணன், கண்ணன், வி.கே.எஸ்.என். ராகவன், வேலுக்குடி கிருஷ்ணன், அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார், பூமா கோபாலன் மற்றவர், அவருக்கு உதவியுள்ளனர். இவ்வாறாக, கிறிஸ்தவ-இந்து உரையாடல் நடந்ததாக, கிறிஸ்தவர்கள் எழுதி வைத்து, விளம்பரம் செய்தனர். அப்பொழுது, குளூனியை அவர்கள் கண்டிக்கவில்லை, அத்தகைய பதிவையும் செய்யவில்லை, மறுக்கவில்லை. பிறகு, நைசாக, தாமஸ் கட்டுக் கதையினையும், அதில் சேர்த்துக் கொண்டனர். இந்துத்துவவாதிகளும் இவருக்கு ஆதரவு கொடுத்துள்ளதும் திகைப்பாக இருக்கிறது[1]. 2009லிருந்து, 2013 வரை அவருக்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்[2].

Tamil Hindu- promoting TKV Rajan-2

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!மே 2012: பிருந்தாவன் மற்றும் குருக்ஷேத்ரா- நினைவலைகள் என்ற சிடி வெளியிடும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர், “கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளுக்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளைய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்”, என பேசினார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறுவனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன்[3], “மகாபாரத போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அதை, “பிருந்தாவன் மற்றும் குருக்ஷேத்ரா- நினைவலைகள் என்ற தலைப்பில், குறுந்தகடாக தயாரித்துள்ளார். அதன் வெளியீட்டு விழாவில், டி.கே. வி. ராஜன் பேசியதாவது: மகாபாரதம் என்பது, உண்மையாக நடந்த ஒரு நிகழ்வு என்பதை உறுதிப் படுத்த, பல ஆதாரங்கள் உள்ளன. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர், பகவத் கீதையை உபதேசித்த இடமான ஜோதிசர், போரில் வெற்றி கிடைக்க அர்ஜுனன் வழிபட்ட குருக்ஷேத்திரத்தில் அமைந்துள்ள துர்க்கை கோவில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்த பான் கங்கா மற்றும் கண்ணன், ராதை சந்தித்த இடமான இம்விதலா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி, அதில் கிடைத்த உண்மைகளை இந்த குறுந்தகட்டில் பதித்துள்ளேன்”, என்றார்[4].

TKV Rajan CD released DM 23-05-2012

ஏசுவை நோக்கி செப்டம்பர் 2012: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பார்வதி கலைக்கூடத்தில் “கிறிஸ்து மற்றும் கிருஷ்ணாஎன்ற தொல்லியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது[5]: “நம்மில் பலர் பொழுதுபோக்குக்கு அதிக நேரத்தைச் செலவழிக்கிறோம். அதை மாற்றிக்கொண்டு நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதன் மூலம் அது சாத்தியமாகும். அப்போதுதான் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட முடியும்”. நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் பேசினார்.

லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ்: “இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நாட்டுப்பற்று கொண்ட நம்மை எந்த விஷயமும் பிரித்து விடக்கூடாது. அதற்கு இது போன்ற கண்காட்சிகள் நிச்சயம் உதவும்”.

இந்திய அறிவியல் கண்காணிப்பு மையத் தலைவர் டி.கே.வி.ராஜன்: “நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். இந்த இரண்டு கடவுள்களும் மக்கள் இடையே விழிப்புணர்வை கொண்டு வந்தவர்கள். அதனால்தான் இக்கடவுள்களைப் பற்றிய இந்த தொல்லியல் கண்காட்சியை நடத்துகிறோம்‘ என்றார்[6]. இந்திய அறிவியல் கண்காணிப்பு மையம் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Jones - Krishna or Christ, Rajan - Christ and Krishna

செப்டம்பர் 2015ல் தமிழ் நாகரிகத்தை நோக்கி: இந்திய அறிவியல் கண்காணிப்பு அமைப்பு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் கூறியதாவது: “தலை சிறந்த தமிழ் நாகரிகம் உலகின் தலை சிறந்த நாகரிகங்களில் மிகப்பழமையானதும், இன்றும் சிறப்பாக இருந்து வருவதும், தமிழ் நாகரிகமே என்பது உலக மொழியியல் மற்றும் உலக வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு சான்றுகளை தொல்லியல் ஆய்வு வழியாக மேலை நாட்டு கிரேக்க ரோமானிய நாகரிகங்களை போல் நம்மால் முழு அளவில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மிடையே இருந்து வருகிறது[7]. ஆதித்தநல்லூரில் அகழாய்வு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதித்தநல்லூரில் (ஆதிச்சநல்லூர்) 1903-ம் ஆண்டு நடத்திய அகழாய்வில் 3 ஆயிரம் வெங்கல பாத்திரங்கள், 2 ஆயிரம் இரும்பு கத்திகள், வேல்கள் 100-க்கும் அதிகமான பொன் பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை விட நுண்ணிய வேலைப்பாடு கொண்ட வெண்கல பாத்திரங்களை வேறு எங்கும் காணமுடியாது என்று பல வெளிநாடுகளும் கூட தெரிவித்தன. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பட்டணம் (இன்றைய பூம்புகார்) கடலில் அழிந்ததாக கூறுகிறது. இங்கு ஆழ்கடல் ஆய்வு 4 கட்டங்களாக சிறிய அளவில் நடந்துள்ளது. இங்கு தீவிரமாக கடல் ஆராய்ச்சி செய்தால் கடல் கொண்ட பூம்புகார் நகரை வெளியே எடுத்துவிடலாம். கடல் ஆராய்ச்சிக்குஅரசு நடவடிக்கை மத்திய அரசுக்கு உட்பட்டுள்ள அமைப்பு தனது விஞ்ஞான தொழில்நுட்பம் கொண்ட ஆய்வு கப்பல்களை தனியார் ஆய்வுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதன் வாடகையை கொடுக்க தமிழ் புரவலர்கள் சிலரும் தயாராக உள்ளனர். ஆனால் சங்க கால ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மத்திய தொல்லியல் இலாகாவும் வெளியுறவுத்துறையின் அனுமதியும் தேவை. இந்த ஆராய்ச்சியை தனியார் எடுத்துச்செல்வது மிகவும் கடினம். எனவே தமிழரின் தொன்மையும், நாகரிகத்தையும் ஆராய ஆழ் கடல் ஆராய்ச்சி தேவை. அதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” இவ்வாறு டி.கே.வி.ராஜன் கூறினார்[8]. பேட்டியின் போது மத்திய தொல்லியல் இலாகா இயக்குனர் டி.தயாளன், மறைமலை அடிகளாரின் பேரன் தாயுமானவன் ஆகியோர் உடன் இருந்தனர். இங்கு அப்படியே, தமிழ்-தமிழ் என்று சொல்லும் சார்புடைய பேச்சாக மாறியிருப்பதை கவனிக்கலாம்.

M A Venkatakrishnan, TKV, T S Krishnamurthy, Karthikeyan

பார்த்தசாரதி கோவிலில், கிருஷ்ணர் ஆராய்ச்சி தொடர்பான தகவல் நுால் வெளியீடுமே 2016: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில், சர்வதேச கிருஷ்ணா கல்வி மையத்தின் சார்பில், தொல்லியல் ஆய்வாளர், டி.கே.வி.ராஜன் தொகுத்த கிருஷ்ணர் ஆராய்ச்சி தொடர்பான தகவல் நுால் வெளியீட்டு விழா நடந்தது. நுாலை, முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, ராமாபுரம் ஸ்ரீவெங்கடேஷ்வரரா கலாசார மையத்தின் துணை தலைவர் ஆர்.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். தொல்லியல் ஆய்வாளர், நுாலின் தொகுப்பாளரும், இந்திய அறிவியல் கண்காணிப்பகத்தின் இயக்குனருமான, டி.கே.வி.ராஜன் பேசியதாவது[9]: “பகவான் கிருஷ்ணர், துவாரகையை தலைமையகமாக மாற்றியதற்கான காரணங்கள், மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ளன. போருக்கு பின், ஆழிப்பேரலை என்ற சுனாமியின் மூலம், துவாரகை அழியப்போவதையும், அர்ச்சுணனிடம் கண்ணன் சொல்லி விட்டு, மறைந்ததாக குறிப்புகள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள காம்பே வளைகுடா பகுதியில், துவாரகை இருந்ததாக குறிப்புகள் இருந்ததால், அங்கு, அகழ்வாராய்ச்சி செய்தோம். அப்போது, மகாபாரதத்தில் உள்ளதற்கு ஏற்ப தரவுகள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த சிவப்பு நிற பானை ஓடுகளுக்கும், தமிழகத்தின் மதுரைனா மாவட்டத்தில் உள்ள பரம்பு மலைப்பகுதியில் கிடைத்த பானை ஓடுகளுக்கும் காலத்தொடர்பு இருப்பதை, தெர்மோ லுாமினசன்ஸ் ஆய்வின் மூலம், நிரூபணம் ஆகி உள்ளது. சங்ககால தமிழ் நுால்கள் குறிக்கும், வேளிர் என்னும் இனத்தை சேர்ந்தவர்கள் கடையெழு வள்ளல்கள். அவர்கள், கண்ணனின் வழித்தோன்றல்கள். பரம்பு மலை, கொல்லி மலை உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், துவாரகையுடன் தொடர்புடைய பல தகவல்கள் வெளிவரலாம். இவ்வாறு, துவாரகைக்கும் தமிழகத்துக்கும் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன. அவற்றை தொல்லியல் ஆய்வின் மூலம் நிறுவப்பட, கடையெழு வள்ளல்களின் வாழ்விடங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்[10]. மகாபாரதத்தில் கண்ணனின் தத்துவங்கள் குறித்து, சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவ துறை முன்னாள் தலைவர் வேங்கடகிருஷ்ணன் பேசினார். “காம்பே வளைகுடா பகுதியில், துவாரகை இருந்ததாக குறிப்புகள் இருந்ததால், அங்கு, அகழ்வாராய்ச்சி செய்தோம்,” என்று இவர் குறிப்பிட்டது எப்படி என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-06-2020

Mary, krishna, inculturation

[1] தமிழ்.இந்து, கண்ணன் என்னும் கலாசார பிரவாகம், By டிகேவி ராஜன், August 13, 2009.

[2] http://www.tamilhindu.com/2009/08/kannan_for_all_time/

[3] தினமலர், மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!, Added : மே 23, 2012 00:52

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=472314

[5] தினமணி, “நேரத்தைப் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும்‘, Published on : 20th September 2012 04:43 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2012/feb/18/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-460199.html

[7]  தினத்தந்தி, செம்படமர் 2015.

[8] http://www.dailythanthi.com/News/State/2015/09/25044951/Archeologist-urges-Government-that-under-sea-research.vpf

[9] தினமலர், கண்ணனின் பரம்பரையே கடையெழு வள்ளல்கள், Added : மே 15, 2016 00:24

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=1522532

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்,  தொடரும் இந்துமத தூஷணங்கள்!

June 25, 2020

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்தொடரும் இந்துமத தூஷணங்கள்!

Vivekananda Yoga University, 25-06-2020

முதல் யோகா பல்கலை: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடக்கம்: கடந்த, 21ம் தேதி, உலகம் முழுதும், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே உலகின் முதல் யோகா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 23-06-2020 அன்று திறக்கப்பட்டுள்ளது[1]. விவேகானந்த யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பல்கலை.யில் முதுகலை பட்டப்படிப்புக்காக மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது[2]. . அந்த பல்கலையை, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்[3].  இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக்கழகமானது, உலகெங்கிலும் உள்ள பல முதன்மை பல்கலை.யுடன் கூட்டு ஆராய்ச்சி, திட்டங்களிலும் ஈடுபட உள்ளது[4]. யோகாவில் உயர்கல்வியில் பயில 200 அல்லது 500 மணி நேர சான்றிதழ் படிப்புகளும், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலும் இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இருக்கும். அமெரிக்கக் காரன் விவரமாகத்தான் இருக்கிறான். “அமெரிக்கன் பஜார்” என்ற நாளிதழில் செய்தி இப்படி உள்ளது. இதெல்லாம் சந்தோசமான விசயம் தான். ஆனால், அதே நேரத்தில், அமெரிக்க்கர்கள் யோகாவை ஏற்கெனவே வியாபாரமாக்கியுள்ளதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா மஞ்சளுக்கு பேட்டன் பெற்றது, ஏற்கெனவே யோகாவுக்கும் கேட்டுள்ளது, இனி அது அடைந்து விட்டால், இந்துக்கள் யோகா செய்ய காசு கொடுக்க வேண்டும் போல!

Bikram Choudhury filed a suit claiming patent 2012

லாஸ் ஏஞ்சல்ஸில் பிக்ரம் சௌத்ரி முதல் ஸ்டீவ் பார்மர் வரை: லாஸ் ஏஞ்சலஸ் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டதே, பிரமிப்பாக இருக்கிறது. ஏற்கெனவே, பிரபலமான இருவரின் யோகா கூடங்கள் – பிக்ரம் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டீவ் பார்பர் – அங்கு இருக்கின்றன. பிக்ரம் சௌதுரி (1944- ) 1971ல் லாஸ் ஏஞ்சலஸில் பிக்ரம் ஸ்டுடியோஸ்” என்ற பெயரில் யோகா பயிற்சி மையங்கள் ஆரம்பித்து, நன்றாக சம்பாதித்து, கொடிகட்டி பறந்தார். அமெரிக்கர் 26-யோகா பாவங்கள் / முறைகள் தம்முடையது என்று பேடென்ட் கேட்டு, வழக்கு போட்டார். பிறகு, அமெரிக்க அரசு, அவ்வாறெல்லாம் கோரமுடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது. 2017ல் 73, வயதில் அவரது மீது கற்பழிப்பு, வித்தியாசம் பார்த்தல் போன்ற புகார்களில் வழக்குகள் போடப் பட்டன. 1971ல் உயர்ந்த அவரது வியாபாரம் 2017ல் அப்படியே சரிந்தது. அதாவது அமெரிக்கர்கள் யோகாவை வியாபாரப் பொருளாக மதிக்கும் போது, பேட்டன்ட் எடுப்பதில் ஆச்சரியப் படுவதில் ஒன்றும் இல்லை. ஸ்டீவ் பார்மர் (Steve Farmer) என்ற ஒரு அமெரிக்கன், இப்பொழுதுமே இந்துமதத்தை விமர்சித்துக் கொண்டிருப்பான். யோகாவைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டிருப்பான். ஆனால், அவனது கம்பெனி யோகா சொல்லிக் கொடுக்கிறான். அதுமட்டுமல்ல, யோகா ஆசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கும் “ஆவ்லான்” என்ற யோகா பயிற்சி கூடத்தை, அதே லாஸ் ஏஞ்சலிஸில் நடத்தி வருகிறான். இரா.மதிவாணனை போர்ஜரி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான். இப்படி

Steve Farmer always criticizing Yoga-master of many subjects

வாடிகனும், யோகாவும், இரட்டை வேடமும்: வாடிகனைப் பொறுத்த வரையில் ஆட்டுக்கு நாடு, சர்சுக்கு சர்ச் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆணைகளையிட்டு சாதித்துக் கொள்ளும். 1950களிலேயே காவி வேடத்தில் கிருத்துவ எஸ்.ஜே.க்கள் உலா வந்து, ஆசிரமங்களை ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் ஏசியன் பிஷப் கான்பரன்ஸ் மற்றும் கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா முதலியவற்றில் விவாதித்து தீர்மானித்து தான். 1989ல் சொதப்பலான விளக்க கொடுத்தது[5].  ஆவணத்தில், “கிழக்கத்தைய மத பழக்க-வழக்கங்கள்,” என்று குறிப்பிட்டு, அடிக்குறிப்பில், ஜென், டி..எம், யோக என்று குறிப்பிடுகின்றது[6]. கிருத்துவ ஒத்து-ஊதும் பாதிரிகள் ஆதரவு எழுத்தாளர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. விளக்கம் கொடுத்து, இந்துமதத்தை தூஷிப்பதே வேலையாகக் கொண்டு, முடித்து விடுவர்[8].

Vatican exorcist says Yoga is Satanic 2011

Vatican exorcist says Yoga is Satanic 2011

நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[9]. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய தீரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[10]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!

Pope compares transgenders and nuclear weapons, priest links yoga and Satan 2015, 2019

அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[11]. ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[12]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனிதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல.

Yoga leads to Satan, Satanism Catican

ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[13]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[14]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[15]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.

Yoga leads to Satan, says Northern Ireland priest

யோகா என்பது சாத்தானின் திட்டம், அதை கிருத்துவர்கள் செய்யலாகாது: அது பேயோட்டுதலை விட மோசமானது. அது ஒரு சாத்தானின் ஆன்மீக செயல்பாடாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். சாத்தான் யோகா செய்வது போல சித்தரித்து நக்கல் அடித்தனர். யோகா செய்யும் போது, ஓம் என்று சேர்ந்து மந்திரங்கள் சொல்ல வேண்டும், தியானம் செய்ய வேண்டும். இதெல்லாம், கிருத்துவத்திற்கு எதிரானது. அமெரிக்க-ஐரோப்பிய நாளிதழ்கள், சஞ்சிகைகள், கிருத்துவ வெளியீடுகள் முதலியவற்றில், யோக முத்திரைகள் எல்லாம் சாத்தானின் அடையாளங்கள், சின்னங்கள், 666 என்றெல்லாம் வர்ணித்தனர். படங்கள் போட்டு, யு-டியூப் போன்றவற்றிலும் அதிரடி வெறுப்பு-பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில், காவியுடைக் கட்டிக் கொண்டு, கத்தோலிக்க ஆசிரமங்கள், புரொடெஸ்டென்ட் சாமியார்கள் வலம் வந்து கொண்டிருந்தனர். தங்களை, “ஐயர்” என்று சொல்லிக் கொண்டு, கிராம, அப்பாவி மக்களை ஏமாற்றினர். கிருத்துவ யோகம் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டனர். இதில் கிருத்துவர்களின் இரட்டை வேடம் தான் வெளிப்பட்டது.

© வேதபிரகாஷ்

25-06-2020

Yoga attacked by Vatican

[1] தமிழ்.இந்து, முதல் யோகா பல்கலை. , Published : 17 Feb 2020 07:38 AM, Last Updated : 17 Feb 2020 07:40 AM

[2] https://www.hindutamil.in/news/vetrikodi/news/539930-yoga-university.html

[3] தினமலர், முதல் யோகா பல்கலைக்கழகம், Added : ஜூன் 25, 2020 12:09

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2564446

[5] Vatican document, CONGREGATION FOR THE DOCTRINE OF THE FAITH- LETTER TO THE BISHOPS OF THE CATHOLIC CHURCH ON SOME ASPECTS OF CHRISTIAN MEDITATION, Joseph Card. Ratzinger, Prefect and Alberto Bovonel Titular Archbishop of Caesarea in Numidia, Secretary,

October 15, 1989.

[6] The expression “eastern methods” is used to refer to methods which are inspired by Hinduism and Buddhism, such as “Zen,” “Transcendental Meditation” or “Yoga.” Thus it indicates methods of meditation of the non-Christian Far East which today are not infrequently adopted by some Christians also in their meditation. The orientation of the principles and methods contained in this present document is intended to serve as a reference point not just for this problem, but also, in a more general way, for the different forms of prayer practiced nowadays in ecclesial organizations, particularly in associations, movements and groups.

http://w2.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_19891015_meditazione-cristiana_en.html

[7] Saliba, John A. “Vatican response to the new religious movements.” Theological studies 53.1 (1992): 3-39.

[8] Stoeber, Michael. “Issues in Christian Encounters with Yoga: Exploring 3HO/Kundalini Yoga.” Journal of Hindu-Christian Studies 30.1 (2017): 3.

[9]  http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/

[10] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

[11] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html

[12] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/

[13] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.

[14] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html

[15] http://www.catholic.org/news/health/story.php?id=59107

Vatican instructions on TM, yoga etc, 1969

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி, ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா ஆனது: ரகசியமாக வந்தது-சென்றது – பின்னணி என்ன?!

December 1, 2019

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி, ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா ஆனது: ரகசியமாக வந்தது-சென்றது – பின்னணி என்ன?!

Sarah Stephanie Landry - different garbs-with Nithyananda

முன்பு பிஷப்பிடம் வேலை பார்த்து புகார் கூறியது, இப்பொழுது, குருவீடம் சிஷையாக இருந்து புகார் கூறியது: இன்றைய நிலையிலும் வெளிநாட்டு காரன், வெள்ளக் காரன் சொன்னதான் ஒப்புக் கொள்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், காசுக்காக இந்தியாவிற்கு வந்து வேலை செய்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள் முட்டாள் இந்துக்கள்! சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். நகைகளை விற்கும் வியாபாரியாகவும் இருந்தார். இதற்காகவும் இணைதளம் வைத்திருக்கிறார். “ஆண் மற்றும் பெண் சக்திகளை சமன் படுத்துக! உள்ளிருக்கும் ஆண் கடவுள் மற்றும் பெண் கடவுளர்களை எழுப்புக! சந்திரக் கல் மற்றும் சூரிய கல் வேண்டுமா, வாருங்கள், என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள்!,” என்ற்லாம் விளம்பரம், வீடியோக்கள். சிவசக்தி படத்தை வைத்து, அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை சின்னமாக்கி, வியாபாரத்திற்கு உபயோகப் படுத்திய சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, என்கின்ற நித்திய சுதேவி! “யார் தருவார் இந்த அரியாசனம், நித்திய சுதேவிக்குக் கிடைத்த சிம்மாசனம்!” பாணியில் உட்கார்ந்து, படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் தான், “குருவுக்கு எதிரான குருவும் நான் தான்!,” போன்று செயல்பட்டு புகார் கொடுத்துள்ளார். இங்கு, நித்தியானந்தாவுடன், நேரிடையாக எந்த மோதலும் இல்லை, ஆனால், எதையோ எதிர்பார்த்து வந்து, அது கிடைக்காதலால், ஏமாந்து, அதன் மூலம் உண்டான வெறுப்பில் வீடியோ-புகார் செய்துள்ளார். ஆனால், அது குஜராத் தந்தையின் பூகாரோடு, நேரத்தில் ஒத்துப் போவது கேள்வியை எழுப்புகிறது.

Sarah Stephanie Landry - with catholic bishop Ralph

பிஷப் ரால்ப் நபிரேஸ்கிடம் ஏற்பட்ட மோதல்:  தானே தெய்வம் போன்று யதேச்சாதிகாரமாக செயல்பட்டு, கூட்டங்களை நடத்தினார். ஏசுயோகா பற்றி புத்தகத்தை வெளியிட்டார்[1]. பிஷப் ரால்ப் நபிரேஸ்கி எல்லா உதவிகளையும் பெற்று, அவரையே குற்றஞ்சாட்டியது வியப்பாக உள்ளது[2], “மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சொல்லிக் கொள்ளாமல் மறந்து விட்டாள்….சமூக வலைதளங்களிலும் எங்களை தடுத்து விட்டாள். …..ஒரு கடவுள் பற்றிய வீடியோக்களை எடுத்து விட்டாள். கிருத்துவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பொழுது, இந்துக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளாள். இதனால், இந்துகிருத்துவர்களிடம் வெறுப்பு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது..” சாரா தான் எழுதிய புத்தகத்தில், இவரைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, கிண்டலாக எழுதியிருப்பது, இவர்க்கு கோபத்தை மூட்டியுள்ளது. இருப்பினும், கிருத்துவர்களான,இவர்களிடையே, ஏதோ போட்டி, பொறாமை, சிக்கல், தகராறு இருப்பது தெரிகிறது.

Sarah Stephanie Landry - different garbs

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, உள்கலாச்சார மயமாக்கல் திட்டத்துடன் செயல் படுகிறார்: வாடிகன் கவுன்ஸில்-II கூட்டத்திற்கு பிறகு உள் கலாச்சார மயமாக்கல் மற்றும் மற்ற மதங்களுடன் உரையாடல் என்ற திட்டங்களுடன், கத்தோலிக்க சர்ச் இந்தியாவில் ஆசிரமங்கள் உருவாக்கி, கத்தோலிக்க பாஸ்டர், பிஷப் போன்றவர்கள் இந்து சன்னியாசிகள் போலவே காவி உடை அணிந்து, இந்துமத சின்னங்களைத் தரித்துக் கொண்டு, உலா வந்து, எளிமையான அப்பாவி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதைப் பற்றிய விவரங்கள் சிலர் எடுத்துக்காட்டி வந்தாலும் பரவலாக இப்பிரச்சனை பேசப்படுவது இல்லை. அவர்கள் இந்துக்கள் போலவே இருந்து கொண்டு இந்து கடவுள்களையும் வணங்கிக்கொண்டு வேடதாரிகள், போலி சாமியார்கள். இவர்கள் பலவித குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். செக்ஸ், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் மற்ற உண்மையான இந்து சாமியார்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் ஊடகங்களில், பொதுவாக சாமியார் குற்றத்தில் ஈடுபட்டார், சிறுமிகளை கற்பழித்த பாலியல் குற்றத்தில் மாற்றிக் கொண்டார் என்று தான் வருகினனவே தவிர, அக்குற்றம் சேர்ந்த சாமியார் கிருத்துவர் என்று சொல்வதே இல்லை. இங்கும் இப்பெண், “கிருத்து தான் கடவுள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறாள். பட்டுப் புடவை அணிந்து, நெற்றியில் பெரிதாக குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு, வேடம் போட்டுத் தான் வந்திருக்கிறார்!

Francis clooney and Sarah Stephanie Landry

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, பிரான்சிஸ் சேவியர் குளூனி ஒப்பீடு செய்ய முடியுமா?: மந்திர-தந்திர-யந்திர வித்தைகள் கற்றுக் கொண்டு ஏமாற்றலாம் என்று இப்பெண் வந்தாளா, தமிழகத்தை குளூனி தேர்ந்தெடுத்தது போன்று தேர்ந்தெடுத்தாளா என்ற கேள்வி எழுகிறது. நித்தியானந்தா ஆசிரமங்களுக்குச் செல்வது, விவரங்களை சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, முதலியவை செய்திருப்பது, அவரது வீடியோக்களிலிருந்து அறியலாம். திருவனந்தபுரம் “ரகசியப் பணிக்காக” சென்றது அதற்காக இருக்கும். பார்வதி போல, திரிசூலத்துடன் போஸ் கொடுத்து, புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்தியர்களான எமக்கு, ஏதோ புராண படத்தில் நடிப்பது போன்று இத்தகைய முறையில் போஸ் கொடுக்க என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை. பிறகு நான் வாடிகனால் அனுப்பப் பட்ட ஒற்றனா இல்லையா என்று ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இறையியல் ரீதியில், கிருத்துவ பெண்ணாக, பிஷப் ரால்புடன் பிரச்சினை என்றால், அதை அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும், தமிழகத்திற்கு ஏன் கொண்டு வரவேண்டும்? “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற போர்வையில் கிருத்துவர்கள் இத்தகைய வேலைகளை செய்ய உட்புகுவது சாதாரணமான விசயமாக உள்ளது[3]. குளுனிக்கும், இப்பெணுக்கும் செயல்பாட்டில் ஒற்றுமை உள்ளது. இந்துபோல வேடமிட்டு நடந்து கொண்டு, பிறகு இந்து மதம், மடாதிபதி, நம்பிக்கைகளை உள்நோக்கத்துடன் குறைகூறுவது அல்லது தமது ஏசு-மேரி இவர்களை வீட கீழானவர் போன்று விளக்கம் அளிப்பது, முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய ஒப்பீட்டு இறையியல் விளக்கத்தினால் தான், குளூனிக்கும், சில சென்னை இந்துக்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அவர், மெத்தப் படித்தவர் என்பதால், அந்த அளவில் போனது. ஆனால், இப்பிரச்சினை, இவர்களது நிலைக்கு வந்துள்ளாதால், அதுபோன்ற நிலையில் உழல்கிறது.

Francis clooney become Hindu scholar

இந்து மதம் தாக்கப் படுவது கண்டிக்கப் பட வேண்டியுள்ளது: இந்து மதத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பல வெளிநாட்டவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவும் அவர்கள், இந்துக்கள் போலவே நடிப்பது, உடை அணிவது, இந்து மதத்தைப் பற்றிப் பேசுவது, இந்துக்களுடன் நட்பு வைத்திருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்[4]. உண்மையில் அதன் மூலம் அவர்களிடமிருந்து, குறிப்பாக விஷயங்கள் தெரிந்தவர்களிடம் இருந்து நுணுக்கமான தகவல்களை பெற்று, அவற்றை தனது வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்[5]. யோகா, ஆயுர்வேதம் முதலியவை அனைத்துலக ரீதியில் வியாபாரமாக வருவதால் அதற்கு இத்தகைய போலி வேடதாரிகள், இந்துத்துவம் போன்ற கொள்கைகள் உதவியாக இருக்கின்றன[6]. பிரச்சினைகள் வரும்பொழுது, குற்றங்களில் மாட்டிக் கொள்வது, சட்டமீறல்கள் என்று வரும்போது, அவர்கள், இந்துமதம் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். தொடர்ந்து அவ்வாறு இந்துமதம் தாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகளும் துணை போவதை கண்டு கொள்ளலாம். இது இவர்கள் எல்லோருக்குமே மறைமுகமாக உறவுகள் இருப்பது தெரிய வருகிறது. இதனால் தான் இத்தகைய செயல்களை இந்துக்கள் எதிர்க்க வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்களது பிரச்சினைகள், குற்றங்கள் முதலியவற்றை தமதாகக் கொண்டு செயல்படாமல், இந்துமதம் தான் காரணம் என்று பொய்சொல்வது, பிரசாரம் செய்வது, கண்டிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

30-11-2019

Sarah video about - her planting by Vatican

[1] https://jesusyoga.files.wordpress.com/2013/07/christ-consciousness.pdf

[2] And then after almost 3 years she just left. Secretly….. with lies, hiding……No word of explanation. After everybody gave everything to her and provided all she did need for almost 3 years… she just left. She blocked us on all her social media and started to spread lies like she never was involved with One In God and that she never promoted unity between hinduism and christianity. She deleted many homepages, posts and maybe 40 Youtube videos where she promoted One In God and unity. And then she started to preach hate against christians. And now she is attacking hindus too. With her lies Sarah Landry is damaging the relations between christians and hindus and is causing hate! https://oig-movement.weebly.com/

[3] We, Indians, really do not understand, who has right to pose like this, she is acting in some Puranic film! Why then, give statement whether she has been planted by Vatican or not! If she had theological or other problems with Bishop Ralph, instead of settling with him, why repeat the same modus operandi here in Tamilnadu?

[4]  கத்தோலிக்கர் மட்டுமல்லாது மற்ற கத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகளில் இந்த போலி நடவடிக்கைகளில் இறங்கி ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர்.

[5] இதில் குளூனி போன்றவர்கள் அடங்குவர். ஞானம், பண்டிதத் தனம், திறமை என்று எல்லாம் இருந்தும், குறிக்கோள் மதமாற்றத்தையும்தாண்டி, கடவுளையே மாற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது எடுத்துக் காட்டப் படுகிறது.

[6] ஸ்டீஃப் பார்மர் போன்ற அமெரிக்க “இந்துத்துவ வாதிகளே” செய்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்து மதத்தை தூஷிப்பது, இன்னொரு பக்கம் யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற இரட்டை வேடங்க்களை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

Indegenization, Indianization or Hinduization: Dubious “Inculturation” activities of Christians without any ethics, morality and integrity

September 14, 2019

Indegenization, Indianization or Hinduization: Dubious “Inculturation” activities of Christians without any ethics, morality and integrity

St John church in Deshnur, Linga inside-Derek Fernandez

Bishop Derek Fernandes, wearing saffron robes and with a vermilion tilak[1]: Photographs on social media of Belagavi diocese Bishop Derek Fernandes, wearing saffron robes and with a vermilion tilak, have stirred a controversy for the Roman Catholic Church in the country[2]. The pictures of Fernandes accompanied by unidentified men – all in the same attire and with some sporting rudraksha malas – appear to show the bishop performing the sacrament of the Eucharist in a church with pictures of Hindu swamis[3]. The pictures, posted on Twitter by journalist-activist Savio Rodrigues, set off a firestorm of charges against the prelate[4]. Some accused Fernandes, whom Pope Francis appointed as the sixth bishop of Belgaum on May 1, of trying to mislead Hindus and described it as a ploy to convert them. Several Christians on Twitter warned the bishop against such activities and some charged him with blasphemy. Bishop Fernandes, currently in Rome, was unavailable for comment. In Karnataka, D. S. Amalopavadass (1932-1990) has already done such experiments inviting criticism from the Church itself. However, the CBCLC, Bangalore has been promoting such activities. Now, he is appreciated as “Indian prophet” and so on[5].

church in Deshnur, 28km from Belagavi.

Inculturation – not-known people may talk, and write anything: How the Hindus have been gullible, the Christians manipulative and the media biased, opportunistic to created sensation can be seen in these postings and the stuff created as news. Ever since, Vatican Council – II was created, the Catholic Christians have bee carrying on these dubious, fraudulent and fancy-dress theology in the name of “inculturation” to have “inter-religious dialogue” with gullible and idiotic Hindus, who do not know what these Christian guys have bee doing. In Chennai, the case of Arulappa vs Ganesh Iyer has been well known, where, the Archbishop Arulappa gave lakhs to Ganesh Iyer to manufacture forged manuscripts, copper plates etc . In the same way, highly arrogant, racist and fundamental Christians of Kerala have been engaged in similar activities. They too do not bother about any ethics, morality and other such values to follow in their activities. Though converted Christians, they behave as if they descended from heaven or born with the mythical Jesus Christ.

St John church in Deshnur, Linga inside

Activist receives threats for tweeting bishop’s pics: Philip Kutty Joseph, vicar general of the Belgaum diocese, said the photographs were taken on August 29 on a visit by Bishop Fernandes to a church in Deshnur, 28km from Belagavi[6]. “The church was earlier called Virakta mutt,” he said. “Jesuit priests first went there more than 40 years ago and adopted Indian practices such as donning saffron robes. In fact, the tabernacle is in the form of a Shiva linga.” Fr Nelson Pinto, a priest of the diocese who responded when TOI attempted to contact Bishop Fernandes at his residence by phone, explained that when the first Jesuit priests went to Deshnur, in a predominantly Lingayat region, they adopted the local culture[7]. “The Jesuit priests became vegetarians and embraced other local practices,” Pinto said. “They did not do it to convert the people who lived there.” Metropolitan Archbishop of Goa & Daman and Patriarch of the East Indies Filipe Neri Ferrão said he was unaware of the incident involving Bishop Fernandes, but said it appeared to be part of a practice that the Catholic Church calls inculturation. “The photographs appear to be of a ceremony that includes inculturation, which the Catholic Church advises in liturgy, attire and so on[8]. It’s the assimilation of local culture,” he said. Even as the Church played down the controversy, however, journalist and activist Rodrigues received threats for tweeting pictures of Bishop Fernandes[9].

St John church in Deshnur, 28km from Belagavi.

The present news have been planted for publicity: So the threatening and all clearly exposes that they have been doing this just for publicity. The photos have been planted, though such activities have been going on. In fact, many more photos are available in internet and it is a wonder how these alert Hindu guys or enthusiastic Christian guys do not know about it. The non-Catholic might oppose and criticize, but, they coolly enjoy as to how the gullible Hindus are being cheated since 1958. Books  like “Catholic Ashrams” have already come out running into several editions[10]. So in such Ashrams, the Christians would appear and roam as Swamis only. Ironically, the pastors, bihops and other clergy are called as “Iyer” in Tamilnadu. Therefore, these neo-Brahmins of Christianity have been experimenting with such “tamashas.”

St John church in Deshnur,inner side

Inculturation – lying Christians[11]: In May 2003, when Indian bishops met Pope John Paul II before concluding their ‘ad limina’ visit to Rome, the Holy Father said[12], “India, blessed with so many different cultures, is a land in which the people yearn for God; this makes the Indian liturgy very distinct.” Though the Roman Catholic Church did not take this incident seriously, the activist cum journalist Rodrigues, who posted the pictures on Twitter has received several threat messages. One of the message says, “Savio Rodrigues, Judas in the name of Catholic. Reward of Rs 50,000, if anyone makes his face black and garlands him with shoes.” Some other Catholics have felt offended by this post of Savio Rodrigues. One such person said, in reply to the tweet of Rodrigues, “Hey Savio or whoever you may be. Please do not speak against our Catholic religion. You have no right to talk against our religion.”

St John church in Deshnur,inner side-2

To add a bit more on the belief system of both cultures, here are similarities between Catholicism and Hinduism:

  • Hindus worship many gods and Catholics worship many saints, both with the burning of candles and incense before statues. Both use images, icons, music, and ritual prayers as means to create an atmosphere of worship. While Hindus chant ritual “mantras,” Catholics chant rosary prayers.
  • Both have a priesthood that acts as an intermediary between the people and God.
  • Both believe in the effectiveness of “holy water” in various cleansing rites.
  • Both believe everyone needs “perfecting” before going to the ultimate reward. Catholics see time in purgatory as necessary to perfection of character, while Hindus believe that reincarnation will give the necessary steps towards perfection.
  • Both believe in the effectiveness of repeated offerings and sacrifices. Catholics believe the mass will effectively offer Christ again and again as a sacrifice for sins, while Hindus will present their gods with sacrifices and offerings of flowers.
  • Both religions have a strong belief that spiritual exercises will lift the worshiper out of the usual round of daily living, and will promote a mystic and superior understanding of existence. St. Ignatius is not really very different in his outlook on “spiritual exercises” than the Hindu mystic in his concentration on escaping this physical world and entering nirvana.
  • Both religions worship a mother goddess. Hindus worship the Goddess Durga as the Supreme Mother, while Catholics venerate Mother Mary .
  • Of course it can be pointed out that Hinduism is polytheistic (worshiping many gods) while Catholicism is monotheistic (worshiping only one God). In practice, Catholicism encourages worshipers to see Mary and the saints as interceders between God and humanity.

St John church in Deshnur,pators standing

Thiruppali book, in Tamil was banned by Vatican[13]: This is cited as an example. A civil court here has banned the use of a 1993 Tamil translation of Catholic prayer book ‘Missal’ (‘Thiruppali book’) until prior approval is obtained from the Vatican. Noting that some words had been wrongly translated and some others removed in the Tamil version, the court recently declared the translation as incorrect and against the canonical law. The Tamil translation of liturgical prayers and texts was first published in 1970 with prior approval from the Vatican. The book was updated in 1975 and underwent some more changes in 1993. Against the last alteration, three suits were filed[14]. Claiming that the changes had been made without approval from Rome and that the authorities had disobeyed the law, the petitioners said it was a case where “additions and omissions from the prescribed text were made”. Further, the four tenets of liturgy – sacrifice, eternal life, sin and doctrine — were dealt in a superficial manner, they said. In their reply, the archbishops of Chennai and Puducherry said the petitioners did not have a locus standi as under the tenets of the religion, they did not have a right to question the translations. The prayers “involved spiritual and religious aspects of the church” and “the court did not have jurisdiction to go into the veracity of church’s authority.” If there was a doubt, “superiors and doctors of church” could be approached, they said. In his order, IV assistant judge T Chandrasekar said it was a mere translation of liturgical book and the priests had failed to prove that the translation had been carried out with approval of the Vatican. If the court was barred from dealing with the matter, “everybody would release translations to suit their convenience,” the judge said. It also prohibited the translated version of book from being used in churches till prior review and approval was obtained from the Vatican.

St John church in Deshnur,inner side-3

Hinduization – how praised and condemned: Swami Kulandaiswami condemned Hinduization like anything, as pointed out by K. V. Ramakrishna Rao. However, Amarlopavadass, Bede Griffiths and others were praised and condemned by the Christians, in spite of the Catholic and non-Catholic affiliations.  Under Vatican Council – II, they claim that it has been their right to do so. Thus, their duplicity is exposed in cheating the Hindus, misinterpreting Hindu scriptures etc., at one side and appropriating the Hindu culture, heritage etc., at other side is also noted. With all these, they also cry that the tribal are Hinduised and so on!

© Vedaprakash

14-09-2019

vatican council II

vatican council II

[1] Times Of India, Furore over Belagavi bishop’s saffron robe, TNN | Updated: Sep 13, 2019, 9:41 IST.

[2] https://timesofindia.indiatimes.com/city/hubballi/furore-over-belagavi-bishops-saffron-robe/articleshow/71106070.cms

[3] MyNation, Belagavi bishop dons saffron robes, all hell breaks loose, By Team Belagavi, First Published 13, Sep 2019, 11:52 AM IST

[4] https://www.mynation.com/india-news/belagavi-bishop-dons-saffron-robes-all-hell-breaks-loose-pxrb1n

[5] Paul B. Steffen SVD, An Indian Christian Prophet:Duraiswami Simon Amalorpavadass (1932-1990),  NURT SVD 1 (2018) s. pp. 209-225 pbwsteffen54@gmail.com, Gregoriana University, Rome.

Father Duraiswami Simon Amalorpavadass (1932-1990) is one of the most significant Indian priests and theologians of the twentieth century. In 1967, he founded the National Biblical, Catechetical and Liturgical Centre (NBCLC) in Bangalore, and then headed it until 1980. He developed an authentic Indian and Christian spirituality, liturgy and theology of evangelization and inculturation.

[6] Daijiworld Media Network, Unusual saffron cloak of Belgaum Bishop creates controversy, Belagavi, Fri, Sep 13 2019 02:10:54 PM.

[7] https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=624208

[8] NewsTimeNow, Belagavi Bishop Stirs Row by Dressing as a Swamy, By Raj Shankar -September 13, 2019

[9] http://newstimenow.com/belagavi-bishop-stirs-row-by-dressing-as-a-swamy/

[10] Sita Ram Goel, Catholic Ashram, Voice of India, New Delhi, 1994.

[11] Indian Catholics Matters, Catholics Raise Eyebrows as Bishop Dons Saffron Robes!, September 13, 2019 Team ICM News, By Verghese V Joseph.

[12] https://indiancatholicmatters.org/catholics-raise-eyebrows-as-bishop-dons-saffron-robes/

[13] Times of India, Tamil version of Catholic prayer book banned, Manish Raj | TNN | Updated: Nov 7, 2013, 2:00 IST.

[14] https://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-version-of-Catholic-prayer-book-banned/articleshow/25338212.cms

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் – பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

May 12, 2018

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

Clooney, Hindu-christian dialogue-with Hindu Swami

கிருத்துவர்களின் போலித்தனம்உள்கலாச்சாரமயமாக்கலும், இந்தியஇந்து எதிர்ப்பும்: உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு வாழ்ந்து, சரியான சமயம் வரும்போது, எல்லோரும் “கிருத்துவர்கள்” என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால், இதுவரை, எந்த இந்துவும் கிருத்துவன் அல்லது முகமதியன் போல வேடமிட்டு, நடந்து கொண்டு, அம்மத நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களைப் போல ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியாதாகத் தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல இந்து குடும்பங்களில் கிருத்துவ மாப்பிள்ளை மற்றும் மறுமகள், தாய் அல்லது தந்தை, மாமியார் அல்லது மாமனார் இருப்பது சகஜமாகி விட்டது. ஆனால், அவர்கள் அதை இந்தியாவில் தங்களது உறவினர்களிடம் கூட சொல்வதில்லை. இப்பொழுது மூன்றாம்-நான்காம் தலைமுறைகள், இந்திய உறவுகளை, சொந்தங்களை, மூலங்களை மறந்து விட்டனர். அவர்களால், இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆகவே, அவர்களிடமிருந்து, இந்துக்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டுவிடலாம்.

Clooney, Hindu-christian dialogue-with Hindu ISKCON and Swaminarayan Swamis

இவ்விசயங்களில்இந்துஎதிர்ப்பில், கிருத்துவப் பிரிவுகள், டினாமினேஷன்கள் ஒத்துப் போவது: பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue), மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா, சுலோகங்கள் சொல்வது, பொங்கல், தீபாவளி கொண்டாடுவது முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Protestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

Clooney, Bama Gopalan, Kumudam

ஒருதலைப் பட்சமான, போலி உரையாடல்கள்: “உரையாடல்” [dailogue], “மதங்கங்களுக்குள் உரையாடல்” [inter-religious dialogu], “மதங்களுக்குள் இடையே உரையாடல்” [inter-faith dialogue] என்ற ரீதியில் கிருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்துக்களுக்கு அது தெரியாது. படித்தவர்கள், “எல்லாம் மதங்களும் ஒன்று,” “எல்லா மதங்களும் ஒன்றைத் தான் போதிக்கின்றன,” “ஒளி பலவென்றாலும் வெளிச்சம் ஒன்று”, என்று ஏதோ மேலெழுந்தவாரியாக அல்லது முற்றும் துறந்த முனிவர் போல பேசும் ரகங்களைத் தான், இந்து சாமியார்களிடம், மடாதிபதிகளிடம், “துறவி” போன்ற வகையறாக்களில் காணப்படுகின்றன. இவர்களால் இக்காலநிலையில், இந்துக்களும், நன்மையை விட, எதிர்மறையான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்திய மதநூல்களை எல்லாம் படித்து விட்டு, அதில் சொல்லப் பட்டிருக்கின்ற இந்து கடவுளர் எல்லாமே, கிருத்துவ மதத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டது, பெறப்பட்டது என்று முடிவாக விளக்கம் கொடுப்பது தான் அவர்களது திட்டம். மறைந்துள்ள ஏசு, உள்ளேயிருக்கும் கிறிஸ்து, ஞானகுரு என்றெல்லாம் சொல்வது அவர்களது வழக்கம். ஆனால், செக்யூலரிஸ, முட்டாள் மற்றும் படிக்காத இந்துக்கள் இதனை அறிந்டு கொள்வதில்லை.

Clooney, Vasudha Narayanan

கிருத்துவர்களின் கட்டுக்கதை மோசடிகள்: ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திர ரீதியில் இல்லை என்று மேனாட்டில், கடந்த 200 வருடங்களில் பெரிய-பெரிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டி விட்டனர். இதனால், கிருத்துவர்கள், கிருத்துவ மதத்திற்கு சரித்திர ஆதாரம், தொன்மை முதலியவை குறைவு மற்றும் இல்லை என்ற ரீதியில், மற்றவற்றின் சரித்திர ஆதாரங்கள், தொன்மை முதலியவற்றை தமது போல காட்டிக் கொள்ள, ஆவணங்களை திரித்து எழுதி, போலி ஆதாரங்களை உருவாக்கி, ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். இவையெல்லாம் இன்றும் தொடர்ந்து வருகின்றன. “அதையும்-இதையும் இணைத்து, இரண்டும் ஒன்று” என்ற ஏமாற்று சமன்பாட்டை வைத்து, ஏமாற்றி வரும் போது, நம்பி மோசம் போவது, இந்துக்கள் தாம். “தாமஸ்கட்டுக் கதை,” “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக்கதைகளின் பின்னணி இதுதான். இதெல்லாம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, மோசடி என்றெல்லாம் அடிக்கடி வெளிப்பட்டாலும், வெட்கமில்ல்லாமல் தொடர்ந்து செய்வது தான் அவர்களது கை வைந்த கலை. ஏனெனில், அத்தகைய விவரங்கள் ஒருசிலருக்கே தெரியும் மற்றவகளுக்குத் தெரியாது என்ற நிலையில், மோசடிகளை செய்து வருகின்றனர்.

Nuns inside Srirangam temple -08-05-2018

ஶ்ரீரங்கமும், கிருத்துவர்களும்: ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் கிருத்துவர் நுழைந்து விட்டார்கள் என்று புலம்புகின்றனர் “இந்துத்துவ வாதிகள்”, ஆனால் கிருத்துவர்களுக்கு உதவுவது இவர்களில் சிலர். 08-05-2018, செவ்வாய்கிழமை அன்று கன்னியாஸ்திரிக்கள் நுழைந்தது “குளூனி” விஜயம் போன்றதா என்று ஆராய வேண்டும்[1]ஏனெனில், குளூனி அங்கு வந்து சென்றபோது, யாரும், இந்த அளவுக்கு போட்டோ, போட்டு கேட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக வெளிநாட்டினர், மற்ற மதத்தினர் கோவிலில் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப் படுவது உண்டு[2]. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இவர்கள் செயலாற்றுவதால் பலனில்லை. ஒரு ஶ்ரீரங்கத்து ஜீயருக்கும் அங்கிருக்கும் ஒரு கிருத்துவ செமினரி பாஸ்டருக்கும் நட்பு என்ற ரீதியில், ஜீயர் பாஸ்டருக்கு மாலை போட்டு கௌரவித்திருக்கிறார், இதை அந்த பாஸ்டரே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், எந்த சர்ச்சோ, செமினரியோ, கிருத்துவ மடாலயமே, இந்துவை உள்ளே விடுவதில்லை. அப்படியே, யாராவது சென்றாலும், “ஏதாவது ஒரு காரணாம் சொல்லி” திருப்பி அனுப்பப் படுவர்.

Francis Clooney at Laksmi temple

பிரான்சிஸ் சேவியர் குளூனி கோவில்களுக்குள் சென்று வந்தது: பிரான்சிஸ் சேவியர் குளூனி [ஹார்வார்ட் புரபசர்] என்பவர், தமிழகத்திற்கு பலமுறை வந்து, கிருத்துவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒப்பீட்டு செய்து ஆராய்ச்சி செய்கின்றேன் என்ற விதத்தில் வந்து போக ஆரம்பித்தார். 1982-83, 1992-93, 2011 என்று பல வருடங்கள் வந்து, வருடத்திற்கும் மேலாக தங்கிருந்தார். “ஐக்கிய ஆலயம்” இவருடைய தங்கியிருந்த இடம், அங்கு தான் இக்னேசியஸ்ஸ் இருதயம் என்பவர் இவரை நன்றாக கவனித்துக் கொண்டார். வெஇயில் வரும்போது, கதர் சர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்ததால், ஏதோ அமெரிக்க பிராமணர் அல்லது “”ஹரே கிருஷ்ண” கோஷ்டி என்று நினைத்துக் கொண்டனர். இதனால், சைக்கிளில் ஊர்வலம் வந்து சென்னை முழுவதும் சுற்றி வந்து, ஏகப்பட்ட கோவில்களுக்கு சென்று வந்துள்ளார். அம்மன் கோவில்கள் இவருக்கு தனிப்பட்ட விருப்பமாகும். தமிழைக் கண்டு கொண்டுதால், அப்படியே பேசி சமாளித்து சமாளித்துள்ளார். பணத்தைப் பொறுத்த வரையில் கவலை இல்லை. தாராளமாகவே செலவழித்திருக்கிறார். தமிழகத்தை பஸ், ரெயில் என்று பயணித்து பற்பல கோவில்களுக்கு சென்று வந்தார். ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் உள்ளூர் நண்பர்கள் உதவியுள்ளனர். திருமலை கோவிலுக்கு 1983 மற்றும் 1992 என்று இரு முறை சென்றுள்ளாதாக அவரே பதிவு செய்துள்ளார். அங்குள்ள பட்டரின் நண்பரான புரபசர் அவருக்கு உதவியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-05-2018


Fr Clooney SJ - lecture -2011

[1] The Hindu, Christian nuns’ visit to temple causes flutter, R. Rajaram, TIRUCHI, MAY 10, 2018 00:00 IST; UPDATED: MAY 10, 2018 05:11 IST

[2] The visit of a group of Christian nuns to Sri Ranganathaswamy Temple in Srirangam on Tuesday evening caused a flutter on social media. The visit raised a furore after allegations were made on a social networking site that the nuns in their religious attire started to pray taking out their rosaries while inside the temple. Photographs showing a group of nuns standing and walking near Thousand Pillar Mandapam were also widely circulated on online messaging platforms. Officials of the Hindu Religious and Charitable Endowments Department said the nuns had come from Kerala as tourists and were indeed in their religious attire, but did not pray with rosaries inside the temple. The nuns were near the Thousand Pillar Mandapam at the outer prakaram when it was brought to the notice of the temple authorities by some devotees. Temple officials said the nuns were politely asked to leave the premises as they were in their religious attire. The nuns left the temple immediately, an official said. Although people of other faiths, including foreign nationals, were permitted inside the temple, they were not allowed beyond the Aryapadaal entrance. Visitors of other faiths were not allowed inside any of the Sannidhis as well, the temple authorities explained.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nuns-visit-to-temple-causes-flutter/article23830818.ece