Archive for the ‘ஜான்’ Category

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

June 25, 2020

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

TKV Rajan book on Kashmir released

தாமஸ் கட்டுக் கதையுடன் இணைப்பது: சி.பி.ஆர்.பவுண்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில், நந்திதா கிருஷ்ணா, டி.கே.வி.ராஜனை புகழ்ந்து பேசினார்[1]. அவர் நடத்திய கண்காட்சியைக் குறிப்பிட்டு[2], “பிருந்தாவனத்தில் பிரேம சரோவர் என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணராதாராணி படங்களும், ஏசுகிறிஸ்துவின் சித்திரங்களும் வைக்கப் பட்டு, இணைக்கப் படுகின்றன…..மேனாட்டவர் கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து ஒப்பீடு செய்து, கிருஷ்ணருடைய போதனைகள் தாமஸிடமிருந்து பெறப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், இலக்கிய மற்றும் அகழ்வாய்வு ஆதாராங்கள் அவ்வாறில்லை என்று உறுதி செய்தது.” தாமஸ் கட்டுக் கதையை இணைப்பது வேறு, இந்தியாவில் கிறிஸ்து என்ற கட்டுக் கதை வேறு, ஆனால், இரண்டையும் வைத்துக் குழப்புவதைப் போன்றுள்ளது. இங்கு தாமஸை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை.

TKV Rajan Christ-Krishna DinaMani 20-09-2012

கிறிஸ்துகிருஷ்ணா கண்காட்சி, கிருத்துவஇந்து உரையாடலுக்கு வெள்ளோட்டமா?: லயோலா காலேஜில், ஃபாதர் ஜேம்ஸிடம் ஆதரவுடன், அன்புடன், “பைபிள் ஆராய்ச்சியைப்” பயின்றேன் என்று சொல்லிக் கொள்கிறார்! கிருஷ்ண பக்தராக இருக்கும் இவருக்கு, அவ்வாறு, பாதரிடம், பைபிள் பாடங்கள் கற்றுக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. இவராக கிருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொண்டாரா அல்லது அவர்கள் இவருக்கு வலை வீசினார்களா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். “கிறிஸ்து-கிருஷ்ணா,” கண்காட்சி போது -, Dr R. சேதுராமன் – Meenakshi Foundation founder etc, ஆர்காடு நவாப் -Nawab Mohammed Abdul Ali, Fr போனிஃபேஸ் ஜெயராஜ் SJ முதலியோரை வரவழைத்து, டி.கே.வி.ராஜன் விழா நடத்தினார். அப்பொழுது, லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ், “இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது,” என்று பிரகடனம் செய்தார். அக்டோபர் 23, 2016 அன்று விவேகானந்தர் அரங்க, வேதாந்த மையம், டெக்சாஸில் “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” என்று மதங்களுக்குள் இடையே உரையாடல் என்ற ரீதியில் பேசினார். ஆக, இங்கு, இவரது, கிருத்துவத் தொடர்புகளின் பின்னணி முழுமையாக வெளிப்பட்டது. அத்தகைய உரையாடலில் பங்குக் கொள்ளத்தான், சென்னையில், “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” கண்காட்சி நடத்தப் பட்டது. நவம்பர் 17, 2018 அன்று டெல்லாஸ், அமெரிக்காவில் உள்ள ராதா-கிருஷ்ண கோவிலில், “ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் மஹாபாரதம்” பற்றி சொற்பொழிவாற்றுகிறார்.

TKV rajan - Christ or Krishna, inter-faith presentation!

ஜான் பி. ஜோன்ஸ் போன்று ராஜன் தயாரிக்கப் பட்டாரா?: “கிருஷ்ணா-கிறிஸ்து” ஒப்பீடு, சி.எப்.சி.வோல்னி[3] கிறிஸ்து என்ற தத்துவம், கிருஷ்ண என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியவுடன், அதனை எதிர்க்க, இத்தகைய வேலைகள் ஆரம்பித்தன. இவை மூன்று நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இதை கே.வி.ராமகிருஷ்ண ராவ்[4] என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஐரோப்பியக் கிருத்துவர்கள் இந்திய புராணங்களில் தான் கடல்கோள்கள், பூமி மூழ்கியது, மறுபடியும் படைப்பு மூலம் உயிரினங்கள் தோன்றியது பற்றிய விவரங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன என்பதை கண்டறிந்தனர். அதில் இருக்கும் காக்கும் கடவுளை – நாராயணனை அவர்கள், கிரிஸ்ட்ன, கிருஸ்ன, கிருஷ்ண, …..என்றெல்லாம் எழுதினார்கள்[5]. முன்னர் சி.எப்.சி.வோல்னி முதல் ஜெ.எம்.ராபர்ட்சன்[6] வரை கிறிஸ்து தத்துவம் கிருஷ்ண என்பதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால், காலனிய ஆதிக்கக் காலத்தில், தம்முடைய ஏசுகிறிஸ்து உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள “கிறிஸ்துவா-கிருஷ்ணரா” என்று ஒப்பீட்டு கதைகளைப் புனைய ஆரம்பித்தனர். ஜான் பி. ஜோன்ஸ்[7] என்பவன், அத்தகைய தாக்குதலை ஆரம்பித்து, அன்டோவர், ஹேல், ஹார்வார்ட், வெஸ்டர்ன் ரிசர்வ் மற்ற பல்கலைக்கழகங்களின் செமினரிகளில் உரையாற்றினான். பிறகு 1902ல் “இந்துக்களுக்குப் பிரச்சினை கிருஷ்ணரா, கிறிஸ்துவா?” என்ற புத்தகத்தையும் வெளியிட்டான். இந்த ராஜன் விசயத்திலும், முன்னர் கிருஷ்ணரைப் போற்றி ஆரம்பித்து, பிறகு “கிறிஸ்து-கிருஷ்ணர்” என்று ஒப்பிட்டு கண்காட்சிகள் நடத்தி, இறகு முடிவாக, மதங்களுக்கு இடையில் உரையாடல் என்று முடித்துள்ளார்.

TKV Rajan batting for Jesus Christ.USA meeting

ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி முதலியவை: டி.கே.சி. ராஜனின் இந்த வீடியோ பேச்சு, “மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்” திகைப்பாக இருக்கிறது[8]. துவாரகா, கிருஷ்ணா, மஹாபாரதம் என்ற்ய் ஆரம்பித்து, “……..தேர்களையும் குதிரைகளையும் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்…. அதற்கு முன்பாக இருந்தவர்களுக்கு குதிரைகளை ஓட்டத் தெரியாது..குதிரைகளே அக்காலத்தில் இல்லை..சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது….என்று ஐராவதம் மகாதேவன்…..ஆஸ்கோ பார்போலோ….அதற்கான strong evidences இருக்கு… archaeological- இருக்கு…..இல்லை அது வந்து வடமொழி சம்பந்தமா ……Sanskrit oriented அல்லது Aryan orented என்று எஸ்.ஆர்.ராவ் ….சொல்கிறார்கள்…. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது திராவிடர்களுடையதாகத்தான் தெரிகிறது….3000 சீல்ஸ் இருக்குங்க.. இப்போ எல்லாமே internetல் available. அந்த ஒவ்வொரு சீலிலும்  pictogram இருக்கும்.அத கண்டுபிடிச்சா….அந்த pictographல் என்ன இருக்கு என்று தான் இப்பொழுது  task……ஆகவே, இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர வேண்டும்..தொடரப் போகிறதுதமிழனின் தொன்மையும், நாகரிகமும் எங்கும் பறைச் சாற்றும் கீழடி போல இந்த சினோலி extend excavation  செய்ய வேண்டும்…,” என்று முடிப்பது வேடிக்கையாக இருக்கிறது[9]. இன்றைய நிலையில், சரித்திராசிரியர்கள் யாரும் ஆரிய-திராவிட இனவாதங்களைக் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட்டனர். ஆனால், இவர் அதை இன்னும் பிடித்துக் கொண்டு “ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி,” என்று பேசியுள்ளது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

TKV Rajan, project

முடிவுரைஇந்துக்களுக்கு எச்சரிக்கை: இந்தியா செக்யூலரிஸ நாடானதால், யார் வேண்டுமானாலும், எந்த மதத்தையும் தழுவலாம், ஆனால், எல்லா மதங்களுக்கும், மத-நம்பிக்கையாளர்களுக்கும் சம-உரிமைகள் இருக்கின்றன. எனவே, யாரும் என் மதம் தான் உயர்ந்தது, எங்கள் மதப்புத்தகம் தான் சிறந்தது, எங்கள் கடவுள்-பெண் தெய்வம் தான் உண்மையான கடவுள்-தெய்வம், மற்றவை எல்லாம் போலி, எங்களுடைய மதங்களிலிருந்து தான் உருவானது என்றெல்லாம், புனைந்து பேச-எழுத உரிமையில்லை. ஆனால், நாத்திகர்கள்-இந்துவிரோதிகள் ஒரு பக்கம் கடவுள்-தெய்வம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரும் அதே நேரத்தில், கிருத்துவகளும், முகமதியரும், மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களை, இந்துமதத்தைத் தாக்குவது, தூஷிப்பது, ஊடகங்களிலேயே வெளிப்படையாக, இத்தகைய கருத்துகளை சொல்வது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் செய்து வருகின்றனர்.

Christ and Krishna - books produced

1.       கிருஷ்ணரைப் பற்றி அல்லது ராமரைப் பற்றி யார்வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம், உரிமைகள் இருக்கின்றன என்று நம்பலாம்!

 

2.       எஸ்.ஆர்.ராவ் (1922-2013) முதன் முதலில் 1980களில் கடலடி அகழ்வாழ்வு மூலம், கடல் கொண்ட துவாரகையைக் கண்டு பிடித்தார்.

 

3.       மஹாபாரத யுத்தத்தில் அணு ஆயுதம் போன்றவை உபயோகப் படுத்தி இருக்கலாம் என்று முதலில் எடுத்துக் காட்டியது பி.என்.ஓக் (1917-2007).

 

4.       எனவே, அந்நிலையில், இப்பொழுது ஆராய்ச்சி செய்தால், இவர்களது ஆராய்ச்சிகளைக் குறிப்பிடாமல் செய்ய முடியாது.

 

5.       அதனால், கிருஷ்ணரைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று ஏற்கெனவே உள்ளதை எல்லாம் குறிப்பிட்டு, ஏதோ புதியதாகக் கண்டு பிடித்தது போல சொல்லிக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!

 

6.       கிருஷ்ணர் என்ற சாக்கில், கிறிஸ்துவையும் சேர்ப்பது, இருவர்களுக்கும் அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன என்று போதிப்பது சரியில்லை.

 

7.       டி.கே.வி.ராஜன் என்பவர் 1990களில் கிருஷ்ண ஜயந்தி சமயத்தில், தனது வீட்டில் கண்காட்சி என்று வைத்து விளம்பரம் கொடுப்பது வழக்கம்!

 

8.      ஆனால், இப்பொழுது “கிறுஸ்துவும், கிருஷ்ணாவும்” என்றெல்லாம் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்து இருப்பது அவர் கிருத்துவர்களில் திட்டத்திற்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது!

9.       போதாகுறைக்கு, ஜேம்ஸ் பாதிரியிடன் பயிற்சி பெற்றேன், ஜெயராஜிடம் பாராட்டுப் பெற்றேன், “பைபிள் அகழ்வாய்வு”லிருந்து, அறியப் படவேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பேசி வருவது திகைப்பாக இருக்கிறது.

 

10.   கிருஷ்ணரின் பெயரால், இத்தகைய சொற்பொழிவுகள், யூ-டியூப், செய்தி விளம்பரங்கள் என்று பிரச்சாரம் நடப்பது உள்-நோக்கம் கொண்டவை என்று தெரிகிறது

 

© வேதபிரகாஷ்

22-06-2020

Christ, Jesus, myth

[1] Dr. Nanditha Krishna of the C.P.R Foundation was all praise for this when it was exhibited at Chennai some years ago. The exhibition also includes a number of images of sites connected with Lord Jesus Christ alongside pictures of places like the Prema Sarovara in Vrindavan where Lord Krishna met Radharani. Nanditha Krishna was commenting upon the work of Rajan.

Vedakrishna.com, Krishna Archeology, Nanditha Krishna, nankrishna@vsnl.com;

[2] Western scholars tried to establish a connection between Krishna and Christ, claiming that the former was derived from St Thomas’ teachings about the latter, but literature and archaeology have proved otherwise.  http://veda.krishna.com/encyclopedia/krishna-archeology.htm

[3]C. F. C. Volney, , The Ruins, or Meditation on the Revolutions of Empires and the Law of Nature, Truth Seeker Co., New York, 1890.

[4] K.V.Ramakrisha Rao, A Critical analysis of “Christian-Vaishnavite Comparative Studies” in the context of “Inter-faith / religious dialogue” and “Inculturation”, it was supposed to appear in a book proposed by Sandhya Jain and others. For some reasons, it is yet to see the light.

[5] Christna, Chrishna, Cristna, Crishna are the words and expressions found recorded in the literature denoting to “Krishna”, the Hindu protecting and Saviour God. “In India, the Christian mind was terribly upset by the Puranic narratives of Flood, the Fish God saviour of the humanity, Narayana – the protecting and Saviour God, Christna, Chrishna or Krishna[5] and other related concepts”.

[6]J. M. Robertson, Hindu Mythology and Christianity, Swati Publications, New Delhi, 1989.

[7] John  P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.

[8] TKV Rajan, மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர், Indian Space Monitor

[9] https://www.youtube.com/watch?v=PQmP36ydCy8

Christ and Krishna - Rosen, 2011

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

Eucharist and cannibalism

Eucharist and cannibalism

யூகாரிஸ்ட் என்ற பலி சடங்கு: விகிபீடியா கூறுகிறது, “திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும்கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள்”.  ரொட்டியும், சாராயமும் / மதுவும் உண்மையாகவே, இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பதனை நேரிடையாக சொல்வதற்கு அவர்கள் பயப்பட்டனர் என்று தெரிந்தது. யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[1]. அதாவது அவரது உடலை திருப்பலி கொடுத்து, பலிப்பூசை செய்து, உடலின் மாமிசத்தை, ரத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்றாகிறது. உலகத்தில் நடக்கும் எல்லா யுகாரிஸ்டிலும் ஏசுகிறிஸ்து உடல் செல்லமுடியாது. அதிலிருந்தே, இது நடக்கமுடியாத காரியம் என்றாகி விடுகிறது. மேலும் ஏசுகிறிஸ்துவை, ஏதோ ஒரு யோகி, முனிவர், பிரம்மா போன்றெல்லாம் சித்தரிக்கும் போது, அவரது உடலை உண்டு, ரத்தத்தைக் குடிக்கும் சடங்கு காட்டுமிராண்டித்தனமாகப் பட்டது. மனித மாமிசத்தை உண்ணும் “கன்னிபாலிஸம்” என்ற குரூரமானப் பிரிவைக் காட்டுகிறது. பிறகு தினம்-தினம் கிருத்துவர்கள் எப்படி மாமிசத்தை உண்டு, ரத்தத்தை குடித்து வருகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், பைபிளின் படியான உண்மையினை ஏற்றுக் கொள்வதா, அல்லது ஒரு சாத்துவிகமான, சைவ கிறிஸ்துவத்தை அளிப்பதா என்ற குழப்பத்தில் சிக்கிக் கொண்டனர். யோகா, தியானம், முதலியவற்றை செய்யும் யோகிகள், முனிவர்கள் புலாலை உண்பது கிடையாது. திருக்குறள் வேறு கிருத்துவ நூல் என்று சில கிருத்துவ பிரகஸ்பதிகள் புத்தகங்கள் எழுதியுள்ளனர், போதாகுறைக்கு அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான மோசடி ஆய்வுகள் செய்து பி.எச்டிகளும் வாங்கியுள்ளனர்.

Eucharist belief of eating the flesh - Rani John experience

Eucharist belief of eating the flesh – Rani John experience

1998ல் ரொட்டி மற்றும் மது, மாமிசம் மற்றும் ரத்தமாகி விட்டன என்று கேரளாவில் கூறிக்கொண்டது: பிப்ரவரி 1998ல், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிகோடு கிராமத்தில் வாழும் ராணி ஜான் பலும்பரம்பில் [Rani John Palumparambil] என்ற பெண், திருப்பலி பிரசாதத்தை வாயில் வைத்தவுடன், அவை சதை மற்றும் ரத்தமாக மாறிவிட்டது என்று கூறினார்[2].  இதை உள்ளூர் கிருத்துவர்களே நம்பாத நிலையில் உள்ளபோது, சிலர் அதனை பிரபலப்படுத்தினார்கள். வேறுவிதமாக இல்லை என்று இதனை மெய்ப்பிக்கும் வரை, இதெல்லாம் ஆண்டவருடைய மகிமை என்றே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சைரோ-மலங்காரா சர்ச் அதிகாரி கூறினார்[3]. இது உண்மையா-பொய்யா என்று ஆராய்வது ஒருபக்கம் இருந்தாலும், உயிர்ப்பலி சடங்கிற்குப் பிறகு மாமிசம் சாப்பிட்டு, ரத்தம் குடிக்கிறார்கள் என்றால், அவை எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழுகின்றது. ஏதாவது ஒரு விலங்கின் மாமிசம்-ரத்தம் கொண்டு வந்து வைத்து, அவற்றைப் பிரசாதமாகக் கொடுத்தால் பரவாயில்லை, ஆனால், பைபிளில் உள்லது படி அல்லது நம்பிக்கையின் படி, மனித மாமிசம்-ரத்தம் கொடுக்கிறார்கள் என்றால் பிரச்சினை ஆகிறது. அப்படியென்றால் அவை எங்கிருந்து வருகின்றன, பிணத்திலிருந்து வருகின்றனவா அல்லது புதியனவாக இருந்தால், அப்பொழுது இறந்த அல்லது கொல்லப்பட்ட மனிதனின் உடலிலிருந்து வந்தனவா போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை, கிருத்துவர்களே பலமுறை எழுப்பியுள்ளார்கள். நாத்திகர்கள் என்ரு சொல்லிக் கொள்ளும் கூட்டங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

The reported Rani John Eucharist miracle negates  the spiritual -cosmic Christ projected to Indians

The reported Rani John Eucharist miracle negates the spiritual -cosmic Christ projected to Indians

ஜானின் வார்த்தை, மாமிசம், வார்த்தை மாமிசமானது முதலியவை: மனித மாமிசம் உண்ணும் கூட்டதினரால் தான் இத்தகைய சடங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் மாமிசம் உண்ணும் சடங்கினைக் கொண்டிருந்தார்கள் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[4]. ஜானின் விளக்கத்தின்படி[5], “வார்த்தை மாமிசமாகியது” என்பதால், சப்தம் பொருளாக மாறியது, வாஸ்து, வஸ்துவாகியது என்றனர். அதுமட்டுமில்லாது, ஜான் சொல்லுவதாவது[6], “ஏசு அவர்களிடம் சொன்னார். உண்மையாக நான் சொல்கிறேன். மனிதனுடைய மகனின் மாமிசத்தை உண்டு, ரத்தத்தைக் குடித்தால் ஒழிய உனக்கு வாழ்க்கை கிடையாது. யார் என்னுடைய மாமிசத்தைப் புசித்து, ரத்தத்தைக் குடிக்கிறார்களோ, அவர்களுக்கு நிலையான வாழ்வு உள்ளது. நான் அவர்களை கடை நாளன்று எழுப்புவேன். ஆதலால், என்னுடைய சதை மாமிசமாகும், ரத்தம் குடிக்கும் மதுவாகும்”. . யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[7] என்று எடுத்துக் காட்டப்பட்டது.  ரொட்டி மாமிசமாக, ஏசுவின் உடலாக மாறுவதும், மது, ரத்தமாக, கிறிஸ்துவின் ரத்தமாக மாறுவதும் “டிரான்ஸ்-சப்சேன்டியாஷன்” (Transubstantiation) என்றும் விளக்கப்படுகிறது[8]. இவற்றையெல்லாம் மீறித்தான், அதாவது ஜீவகாருண்யம் மிக்க, மாமிசன் தின்னாத, ஒரு சைவ கிறிஸ்துவை இந்துக்களுக்குக் கொடுக்க கிருத்துவர்கள் படாத பாடுபடுகின்றனர். ஆன்மீகப்போர்வையில், பல திரிபுவாதங்களையும் கொடுத்து வருகின்றனர்.

Victor Kulanday book - Paganization of the church in India

Victor Kulanday book – Paganization of the church in India

சிவன்பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்மேரி என்ற கணவன்மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை: கிருத்துவயியலேயே பற்பல முரண்பாடுகள் இருக்கும் இந்நிலையில் தான், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீட்டு கோஷ்டிகள், தக்களது குழப்பத்தைத்தாண்டிய தூஷணத்தையும் சேர்த்துக் கொண்டது. ஓம் என்றால் பெண்ணின் குறியைக் குறிக்கிறது, சிவன் பார்வதியைப் புணர்ந்த போது சதோஷத்தினால் எழுப்பிய சப்தம் தான் ஓம் என்று ஜே. எப். விக்டர் என்ற சாமி குலந்தைசாமி விளக்கம் கொடுத்தார்[9]. ஏசு கிறிஸ்து மேரி மற்றும் அவளது கணவனான ஜோஸப் புணர்ந்து பெற்ற பிள்ளை கிடையாது என்கின்றனர். அதாவது, ஏசு கிறிஸ்து, ஜேஹோவாவின் பரிசுத்த ஆவி, நேரிடையாக மேரியைப் புணர்ந்ததால், கருவுற்று பெற்றெடுத்தாள் என்கிறது பைபிள். மேரி, “நான் எந்த ஆணையும் அறியேன்”, என்பதற்கு, எந்த ஆணுடனும் உடலுறவுக் கொள்ளவில்லை என்று நேரிடையாக மொழிபெயர்க்காமல், அவ்வாறு நாஜுக்காக, மொழிபெயர்த்தனர். நுற்றுக்கணக்கான வெளிவந்துகொண்டிருக்கும் பைபிள்களில் பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன[10]. “நான் கன்னி, நான் எந்த ஆணையும் அறியேன், நான் எந்த ஆணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை, நான் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை…………”, என்று பலவிதமாக மொழிபெயர்த்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளாமல், ஒரு பெண் கருவுற்றிருக்க முடியாது, குழந்தையையும் பெற்றிருக்க முடியாது. அப்படியென்றால், மேரியை யாரோ புணர்ந்தபோது,   சதோஷத்தினால் அவர் எந்த சப்தமத்தை எழுப்பினால் என்பதை திருவாளர் சாமி குலந்தைசாமி சொல்லியிருக்க வேண்டும், ஆனால், சொல்லவில்லை!

Victor Kulanday - a fundamentalist Catholic but posing as Swami

Victor Kulanday – a fundamentalist Catholic but posing as Swami

ஏசுவின் சகோதரர்களும், கிருத்துவ சாமிகளும்: “சிவன்-பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்-மேரி என்ற கணவன்-மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், ஆவி வந்து புணர்ந்தது என்பதனை ஏற்றுகொள்கிறார்கள். பிறகு மதங்களுக்கு இடையிலான உரையாடல் என்று வரும்போது, எப்படி, இந்துமதத்தை மட்டும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இந்துவும், பதிலுக்கு கேட்கலாமே, மேரிக்கு எப்படி குழந்தை பிறந்தது, என்று. இல்லை, குழந்தை பிறந்தது என்றால், யாரோ மேரியைப் புணர்ந்துள்ளான் என்றகிறாது என்றும் வாதிடலாம். இதைத்தவிர, பைபிளிலேயே ஏசுவின் சகோதரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அப்படியென்றால், மேரிக்கு இன்னும் பல பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள் என்றாகிறது. பிறகு அவர்கள் எப்படி பிறந்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், சர்ச்சை இந்துமயமாக்கப்படுகிறது என்று மிக்கக்காட்டமாக, புத்தகத்தை எழுதியுள்ள இவர், தானே காவியணிந்து கொண்டு, நீண்ட முடி வைத்துக் கொண்டு, சாமி குலந்தைசாமி என்று கூறிக் கொண்ட இவரது முரண்பாட்டை என்னென்பது?

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] http://www.newadvent.org/cathen/05573a.htm

[2] http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[3] According to the Syro-Malankara metropolitan, the messages are “in tune” with the Catholic faith. Unless proved otherwise, he said, he has reason to believe that the miracles are genuine and part of God´s design.

http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[4] Bob Arson, Butchering the Human Carcass for Human Consumption, see at:  http://www.churchofeuthanasia.org/e-sermons/butcher.html

[5] And the Word was made flesh, and dwelled among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth (John: 1.14).

[6] Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you. Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. For my flesh is meat indeed, and my blood is drink indeed. (John 6:53-55)

[7] http://www.newadvent.org/cathen/05573a.htm

[8] Transubstantiation (in Latin, transsubstantiatio, in Greek μετουσίωσις metousiosis) is the change whereby, according to the teaching of the Catholic Church, the bread and the wine used in the sacrament of the Eucharist become, not merely as by a sign or a figure, but also in actual reality the body and blood of Christ.

[9] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988, p.72.

[10] http://biblehub.com/luke/1-34.htm