கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)!
மூச்சடைப்பு வித்தையிலிருந்து, ஏசு-மேரி மேக்தலின் கதை வரை: மூச்சை அடக்கினால், மனதை அடக்கலாம், சிந்தனைகள் ஒருமிக்கும், அவை ஏசுகிறிஸ்துவுடம் செல்லும் என்று சொல்லிக் கொடுத்து, யாகாவை கிருத்துவத்தில் நுழைத்து ஏற்றுக்கொண்டனர். ஒரு நிலையில், ஏசுதான் யோகாவின் தலைவர், அவர் தான் முதன் முதலில் யோகாவைக் கண்டுபிடித்தார், இந்தியர்கள் அவரிடமிருந்து காப்பியடித்தனர் என்றா ரீதியில் புத்தகங்களில் எழுதி வைத்தனர். இதனால் தான், ஏசு தனது இறுதி நாளில், சிலுவையில் மரிக்காமல், உயிர்த்தெழுந்து, மேரி மேக்தலினுடன், கார்ஷ்மீரத்திற்கு வந்து, தனது இறுதி நாட்களைக் கழித்தார். அவருக்கும், மேரி மேக்தலினுக்கும் குழந்தைகள் பிறந்தன. அவை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப் பட்டனர். அவர்கள் வழிவந்த வம்சம் தான் மெரோவிங்கியன் போன்றவை. “கிரைல்” எனப்பட்ட, “அட்சயப் பாத்திரம்” அக்குடும்பத்தாரால், ரகசியமாக பாதுகாத்து வைக்கப்பட்டது, என்றெல்லாம் புதுப்புது கதைகளை உருவாக்கினர். மேற்கத்தைய நாகரிகத்தில், ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திரரீதியில் இல்லாதது என்று ஒதுக்கிவைத்த நிலயில், இந்தியாவுடன் தொடர்பு படுத்தி, அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர். அந்நிலையில், இந்த யோகாவை கையில் எடுத்துக் கொண்டனர். “கிறுஸ்துவ யோகா யூனியன்” என்றெல்லாம் பெயரிட்டு, யோகா மையங்களை ஆரம்பித்தனர்.
யோகாகுருவாகச் சித்தரிக்கப் பட்ட ஏசு எப்படி திடீரென்று மறுக்கப்பட்டார்?: யோகா விசயத்தில் கிருத்துவர்களின் போலித்தனம், மோசடி வேலைகள், இரட்டை வேடங்கள் என்று எல்லாமே வெளிப்பட்டன. கத்தோலிக்க ஆசிரமங்களில் காவியாடை வேடங்களுடன் முக்கியமாக, தியானம் மற்றும் யோகா முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, பின்பற்றப்பட்டன. யோகா சொல்லிக் கொடுக்க குரு வேண்டும் என்றபோது, அவர்களே “குருவாகி” யோகாபயிற்சியை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். “மூலமந்திரம்” குருவினால் போதிக்கப்படவேண்டும், என்றபோது, “ஏசுவாய நமஹ”, “கிறிஸ்துவாய நமஹ” என்று போலி மந்திரங்களை உருவாக்கிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். போதாகுறைக்கு, ஏசுகிறிஸ்துவையே யோகாகுரு மாதிரி மாற்றிவிட்டனர். அத்தகைய சித்தரிப்புப் படங்கள் உலகம் முழுவதும் உல்லா வந்தன! 1965 முதல் 1989 வரை எல்லாமே ஏற்றுக்கொள்ளப் பட்டவை, ஒப்புக்க்கொள்ளப்பட்டவை, எப்படி திடீரென்று வேறுவிதமாக மாறியது என்று தெரியவில்லை. கத்தோலிக்க ஆசிரமங்கள் இவ்வாறு யோகா முறைகளில், எல்லைகளைக் கடந்து செல்வதை, கண்டிக்க வேண்டும், வேறுவழியில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, கத்தோலிக்கப் பாதிரிகள், முதலில் கண்டிக்க ஆரம்பித்தனர். இறுதியில், போப்பை வைத்து தடையாணையைப் போட்டனர்.
ஓமில் இருந்து ஏசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட்டார்!: யோகா என்பது பொதுவானது, அது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்பு படுத்த முடியாது என்றும், கிருத்துவ அறிவுஜீவிகள் சொல்ல ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் சிலர் அதற்கு “உரிமை” கொண்டாடவும் முயன்றனர். அமெரிக்காவில், இந்துமதத்தை எதிர்க்கும், ஸ்டீப் பார்மர் போன்ற ஆசாமிகள், “யோகா” சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால், 1989ல் இந்த பிரச்சினையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, டிசம்பரில் 23 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தின் மூலம், கிருத்துவர்கள் அத்தகைய முறைகளைப் பின்பற்றக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளக்கம் அளித்தது. இது தவிர நவீன கால இயக்கம் (The New Age Movement) என்ற கிருத்துவர்களின் வேலகளையும் போப் கண்டித்தார்[1]. பௌத்தர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு, பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த, கிருத்துவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொறுந்தும். எனினும், அவர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. போப்போ தியானம் மற்றும் யோகா முறைகள் கிருத்துவர்கள் கண்மூடித்தனமாக செய்யக் கூடாது என்று கண்டித்ததையும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே பிரபலப்படுத்தவில்லை[2]. ஆக, யோகா-குரு கிருஸ்து மறுபடியும், சிலுவையில் ஏற்றபட்டார்!
யோகா சாத்தானின் செயல்: பால் எச்சரிக்கை செய்தபடி, சாத்தானே தேவதை போல வேடமிட்டு வருகிறான் [Paul warns that “Satan himself masquerades as an angel of light” (2 Cor. 11:14). அதனால், அத்தகைய பிரயோகங்களை செய்யலாகாது என்று விளக்கம் கொடுத்தனர்[3]. பிறகு மெத்தப்படித்த பேட் கிரிபித்ஸ். அமலோர்பவ தாஸ், லூர்துசாமி முதலியோருக்கு அவையெல்லாம் தெரியாமலா போயின? பிறகு எதற்கு அத்தகைய, சத்தானின் கிரியைகளை ஊக்குவித்தனர்? அப்படியென்றால், 1989 முதல் 2014 வரை அவர்களது சாத்தானின் காரியங்களை ஏன் ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தனர்? பைபிளில் சங்கீதத்தில் வரும், “தியானம் என்றால், கடவுள் எப்படி உண்மையினை வெளிப்படுத்தியுள்ளாரோ அவற்றை நினைப்பதுதான். உங்களுடைய தத்துவங்களை மற்றும் வழிகளை கருத்திற்கொள்வேன் மற்றும் தியானிப்பேன்; உங்களது ஆணைகளை ஏற்றுக்கொள்வேன்; உங்கள் வார்த்தையினை நான் மதிக்காமல் இருக்கமாட்டேன், என்றெல்லாம் பைபிளில் உள்ளவற்றின்படித்தான் தியானம் செய்ய வேண்டும்”, என்று விளக்கம் கொடுக்கப்பட்டது[4]. அதை விடுத்து, வேறு முறைகளைக் கையாடுதல் கூடாது[5], ஏனெனில், அவை கடவுளுக்கு உகந்தததல்ல என்றுதான் போதிக்க ஆரம்பித்தனர். யோகாவை ஏசுகிறிஸ்துவுடன் இணைத்த மேதாவிகள், காவி-அறிவுஜீவிகள், பாஷாண்டிகள், பிரகஸ்பதிகள் எப்படி திடீரென்று இவ்வாறு மாறினர் என்று தெரியவில்லை?
நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[6]. இவர் தனது 85 வயது காலத்தில், 25 வருடம் வாடிகனில் அந்த வேலையை செய்து வருகிறார். இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பேய்-பிசாசுகளை ஓட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய திரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[7]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!
அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[8]. ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனுதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல. ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[10]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[11]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[12]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.
© வேதபிரகாஷ்
20-05-2015
[1] Pope John Paul II, The threshold of Hope,
[2] Ram Swarup, Pope Johj Paul II on Eastern Religions and Yoga – A Hindu-Buddhist Rejoinder, Voice of India, New Delhi, 1995.
[3] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html
[4] In the Bible, meditation always means pondering God’s revealed truths and reflecting on how they pertain to us. David revels in the richness of God’s law throughout Psalm 119. He encourages us to meditate on it: “I meditate on your precepts and consider your ways. I delight in your decrees; I will not neglect your word” (Ps. 119:15-16). Since all Scripture is God-breathed (2 Tim. 3:16), all of it is profitable for meditation in the biblical sense.
[5] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html?start=2
[6] http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/
[7] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’
[8] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html
[9] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/
[10] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.
[11] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html